கோயில்களில் வழிபாடு என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் ஆடு, மாடுகளைப் பலியிடுகிறார்களே! அந்த இடம் புனிதமானதா?

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கோயில்களில் வழிபாடு என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் ஆடு, மாடுகளைப் பலியிடுகிறார்களே! அந்த இடம் புனிதமானதா?

Post by marmayogi » Wed May 11, 2016 8:14 am

கேள்வி: கோயில்களில் வழிபாடு என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் ஆடு, மாடுகளைப் பலியிடுகிறார்களே! அந்த இடம் புனிதமானதா?
பதில்: அந்த இடம் மனித வாழ்க்கைக்குத் தகுதியற்ற இடமாக (Contaminatted Place) இருக்கும். மிருகங்களுடைய் உயிர்கள் மனித உடலோடு இணைந்து செயல்பட முடியாது. அதே போன்று மனிதனுடைய உயிரும் மிருகங்களின் உடலில் புகுந்து கொள்ள முடியாது. காரணம் இரண்டினுடைய தன்மையும் பரிணாமமும் வேறுபட்டவை.
ஆனால் அங்கே கொலையை நிகழ்த்துகிற மனிதனுடைய எண்ணமும், கொலையுறுகின்ற உயிரினுடைய அலறலும் அந்த இடத்தை மாசுபடுத்தி இருக்கும். இவை ஆதிகால மக்கள், மலைவாழ் மக்களால் அறிவின் வளர்ச்சியில்லாத போது தொடங்கப்பட்ட பழக்கங்கள்.
வாழ்க வளமுடன்!

:-அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
jayapriya
Posts: 29
Joined: Fri Sep 20, 2013 4:48 pm
Cash on hand: Locked

Re: கோயில்களில் வழிபாடு என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் ஆடு, மாடுகளைப் பலியிடுகிறார்களே! அந்த இடம் புனிதமானதா?

Post by jayapriya » Wed May 11, 2016 10:23 am

எத்தனை ஞானிகள் எப்படி உரைத்தாலும் இம்மாதிாியான விசயங்களை தடுக்க முடிவதில்லை என்ன செய்வது?
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: கோயில்களில் வழிபாடு என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் ஆடு, மாடுகளைப் பலியிடுகிறார்களே! அந்த இடம் புனிதமானதா?

Post by marmayogi » Wed May 11, 2016 12:02 pm

jayapriya wrote:எத்தனை ஞானிகள் எப்படி உரைத்தாலும் இம்மாதிாியான விசயங்களை தடுக்க முடிவதில்லை என்ன செய்வது?


தெய்வநியதி படி வாழவில்லையெனில் புவி வெப்பமாதல் , சுனாமி, பூகம்பம் , சூராவளி போன்ற இயற்கை சீற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. கடவுள் நீதியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”