ஊரெங்கும் கசாப்பு கடைகளில்,கூவி அழைக்காமலேயே கூட்டம் போகின்றது...
உயிர் வாழத்தான் உணவே அன்றி பிற உயிர்களைக் கொலை செய்து உண்பதற்கல்ல ...
உணவுக்கு வழி உண்டே ஆயிரம் வழி இருக்க; பின் எதற்கு பிற உயிரின் உடல்?
சுவைதான் முக்கிய மென்றால் பிணத்தின் சுவை கூடவா முக்கியம்?
செத்தவை எல்லாம் பிணந்தானே!
சுடுகாட்டில் பிணம் புதைக்கலாம்;வயிற்றில் புதைக்கலாமா?
கோயிலுக்கு வரும்போது அசைவத்தை தவிர்க்கும் மனம் உடலே ஒரு கோவில் என்பதே உணர மறுத்ததேனோ?
யாரோ கொன்றதை நீ ஏன் தின்று பலி ஏற்கிறாய்?
எண்ணத்தைச் சீரழிக்கும் புலாலை இக்கணமே விலக்கி விடு பயத்தினால் வருவதல்ல பக்தி தவறை நீ எப்போது திருத்திக் கொள்வாய்?
நல் எண்ணம் உருவாக நல்லதையே நாடிடு தேடிப் போய் நன்மை செய்ய வேண்டிய தில்லை புலால் விலக்குதலே பிற உயிருக்கு உதவுதலாம்...
நன்றி!!!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...
உயிர் வாழத்தான் உணவே அன்றி பிற உயிர்களைக் கொலை செய்து உண்பதற்கல்ல ...
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked