ஒரு சாமியாரிடம் நீங்கள் போகும்போது ஏதோ ஒரு விஷயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் போகிறீர்கள்.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ஒரு சாமியாரிடம் நீங்கள் போகும்போது ஏதோ ஒரு விஷயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் போகிறீர்கள்.

Post by marmayogi » Wed Jan 20, 2016 10:21 am

★ஒரு சாமியாரிடம் நீங்கள் போகும்போது ஏதோ ஒரு விஷயத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நீங்கள் போகிறீர்கள்.என்னிடம் வருகின்ற மக்கள் என்னைக் கேட்கிறார்கள்."தங்களின் அருளாசிகளை எங்களுக்கு அளியுங்கள்."

★என்னுடைய அருளாசிகளை நீங்கள் எதற்காகக் கேட்கிறீர்கள்.?

நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.அது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது.எனவே "அதில் வெற்றிபெற அருள்கூர்ந்து உதவி செய்யுங்கள்".அங்கே ஒரு வழக்கு இருக்கிறது.அதற்காக நீங்கள் என்னிடம் வந்திருக்கிறீர்கள்.!.ஆனால்,சாமியார்கள் என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள் அப்படிப்பட்ட வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.!

★நீங்கள் அவர்களைச் சாமியார் என்று அழைக்கிறீர்கள்.ஆனால் நீதிமன்றத்தில் உங்கள் வழக்கு வெற்றி பெற அவர்கள் அருளாசிகள் வழங்குகிறார்கள்.தேர்தலில் நீங்கள் வெற்றிபெற அவர்கள் அருளாசிகள் வழங்குகிறார்கள்.உங்கள் நோய்கள் குணமாக அவர்கள் தாயத்துக்கள் வழங்குகிறார்கள்.

★ஒரு விஷயத்தை நன்றாக அறிந்துகொள்ளுங்கள்.உங்களுடைய உலகத்தில் உங்களுக்கு உதவி செய்கின்ற எந்த ஒரு நபரும் ஒரு துறவியாக இருக்க முடியாது.உங்களுடைய வியாபார உலகில் அந்த நபரும் வெறுமனே ஒரு அங்கமாக இருக்கிறார்.அவர் மதம் சம்பத்தப்பட்ட ஒரு கடையின் உரிமையாளர்.அவரும் ஒரு வியாபாரிதான்-உங்களைப்போலவே.ஆனால் அவர் உங்களைக்காட்டிலும் திறமையான வியாபாரியாகத் திகழ்கிறார்.

★கண்ணுக்குத் தெரியும் பொருட்களை நீங்கள் விற்கிறீர்கள்.கண்ணுக்குத் தெரியாத பொருட்களை அவர் விற்கிறார்.கண்ணுக்குத் தெரியாத இந்த விற்பனைப் பண்டங்களை நீங்கள் தொட்டுகூடப் பார்க்க முடியாது.அவரைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.!.உண்மையான ஒரு துறவி உங்களுக்கு அதிர்ச்சி அளிப்பார்.உண்மையான ஒரு துறவி உங்களுக்கு அடிமேல் அடி கொடுப்பார்.உண்மையான ஒரு துறவியின் இருப்பில் கையாலாகாதத்தனமான கோபக்கனலில் நீங்கள் பற்றியெறிவீர்கள்.

★உண்மையான ஒரு துறவியின் இருப்பில் பற்பல முறைகள் நீங்கள் கோபக்கனலில் பற்றியெறிவீர்கள்.உண்மையான ஒரு துறவியிடமிருந்து பற்பல முறைகள் நீங்கள் தப்பி ஓடிவிட முனைவீர்கள்.உண்மையான ஒரு துறவியயிடம் நீங்கள் அஞ்சி நடுங்குவீர்கள்.உண்மையான ஒரு துறவியிடம் செல்வதற்கு முன்பாக ஆயிரம் முறை நீங்கள் யோசனை செய்வீர்கள்.எனென்றால்,ஞானவிழிப்படைந்த ஒரு நபரின் அருகில் செல்வது மாற்றத்தைக் குறிக்கிறது.உருமாற்றத்தைக் குறிக்கிறது.

:-ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”