சூட்சுமப் பொங்கல்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

சூட்சுமப் பொங்கல்

Post by marmayogi » Sun Jan 17, 2016 4:16 pm

வெட்ட வெளி என்ற பெரும்
பானைக்குள்ளே வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி,
அட்டதிக்கும் அறிவாலே துழாவி
விட்டேன்...
ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன
இன்பம், கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல் கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்
தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது
சுவைக்கச் சுவைக்க இன்பமிகும்
சூட்சுமப் பொங்கல்."


"பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு;
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு,
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."

:- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”