பேரின்பக் களிப்பு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பேரின்பக் களிப்பு

Post by marmayogi » Sun Jan 17, 2016 3:30 pm

மண்ணான இவ்வரிய மாபெரிய உலகமிசை
மனமுடைய மிகச்சிறிய மனிதவுரு வாழுகின்றேன்
எண்ணரிய ஆயிரங்கள் எண்ணங்கள் என்னுளத்தே
எழுகின்ற விந்தையினை யார் அறிவார் ? யார் அறிவார் ?

சின்னஞ்ச்சிறு செல்கள் சேர்ந்திணைந்து ஒத்துழைத்து
சிந்தனைக் கெட்டாச் செயல்கள் சிறப்புடலில் நிகழ்த்துவன
முன்னம் ஒரு துளியான மூலவிந்து நாதத்தால்
முழுமையாய் எனது உடல் முற்றறிவின் திருவருளால்.


- வேதாத்திரி மகரிஷி


இயற்கை வளங்கள் நிறைந்த இந்த அற்புதமான உலகத்தில்
வாழுகின்ற இலட்சக் கணக்கான உயிரினங்களில் உயர்ந்த
நிலையிலே மனம்கொண்ட மனிதனாக மிகச் சிறிய உருவமுடன்
பிறந்து வாழுகின்றேன் ! இந்த மனதில் ஆயிர மாயிரம்
எண்ணங்கள் அடுத்தடுத்து எழுகின்றன ! இதை நினைக்கும்போது
உண்டாகும் ஆச்சரியத்துக்கு அளவுகோலே இல்லை. இந்த அரிய
நிகழ்ச்சிக்கு காரணத்தை யாரால் அறியமுடியும் ?
இறைநிலையே இறைத்துகலாக எழுச்சிபெற்று, அவையிணைந்து
அணுக்களாகி, அவையிணைந்து செல்களாகி, செல்கள் இணைந்து
உறுப்புகளாகவும், சதையாகவும், எலும்புகளாகவும் உருமாற்றம்
பெற்று பரு உடலாக தோற்றம் அளிக்கின்றது. இவ்வுடலுக்குள்
நிகழும் இயக்கங்கள், அற்புதங்கள் சிந்தனைக்கு எட்டாதவை.
தாய்தந்தையின் சேர்க்கையால், அவர்களின் விந்து நாதம்
இணைந்து தாயின் கருவறையில் எனது உடல் முழு வளர்ச்சி
பெற்று உலகில் பிறந்தேன் ! முற்றறிவின் திருவருளால் !
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”