கடவுள் நம்பிக்கை

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கடவுள் நம்பிக்கை

Post by marmayogi » Sun Jan 03, 2016 8:50 pm

சீடரின் கேள்வி:
☆☆☆☆☆☆☆

★கடவுள் மட்டுமே மனிதனின் ஒரே நம்பிக்கை என்பதாலும் மனிதரின் அனைத்து எதிர்பார்ப்புகளும் கடவுளை நம்பியே இருக்கின்றன என்பதாலும் கடவுளை மறந்துவிடுவதென்பது சிரமமாக இருக்கிறது எனலாமா?

★எதிர்பார்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும்போது அது ஏமாற்றத்தில்தான் முடியுமென்று தோன்றினாலும் அதைக் கைவிடுவது சிரமமாகத்தானே இருக்கிறது.?

ஓஷோவின் பதில் :
☆☆☆☆☆☆☆☆

'உண்மைதான்'

★ஓர் எதிர்பார்ப்பை,ஒரு நம்பிக்கையைக் கைவிடுவது சிரமம்தான்.ஏனென்றால் வாழ்க்கையில் எதுவுமே சாஸ்வதமாக இருப்பதில்லை.
நாளை என்பது நன்றாக இருக்கப் போகிறது என்ற நம்பிக்கையில் தானே வாழ்க்கை நடக்கிறது!

★இறந்த பின்னும் சொர்க்க போகத்தை அனுபவிக்கும் நம்பிக்கையில்தானே வாழ்கிறாய்!.அதனால் கடவுள் மீது வைத்த நம்பிக்கையை விட்டுவிடுவது சிரமமாகத்தான் இருக்கிறது.ஆனால்,இன்பத்திலிருந்தும் ஆனந்தத்திலிருந்தும் பரவசத்திலிருந்தும் உன்னை இழுத்துப் பிடித்து நிறுத்தியிருப்பதே இந்தக் கடவுள்தான்.

★எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையில் நிகழ்காலத்தை இழந்து நிற்கிறாய்.எதிர்காலம் என்பதோ நிச்சியமில்லாமல்தான் இருக்கிறது.நாளை என்பது நிகழ்வதேயில்லை.

நாளை வருவதை எப்போதாவது உணர்ந்திருக்கிறாயா?

கடவுளும் நாளை என்பதைப் போலத்தான்.

★அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் ஓர் உணர்வு வருவதைப் போல் இருக்கிறது.ஆனால் அது இன்றாக மாறிவிட்டது.நாளை வந்து இருக்கப் போவதில்லை.எந்த நம்பிக்கையும் உண்மையாவதில்லை.எல்லா எதிர்பார்ப்புகளும் விரக்தியில்தான் முடிகின்றன.நடனமிட வகையில்லாத வாழ்வு வாழ்வேயில்லை.அத்தகைய வாழ்வு வெறுமனே உயிரோடிருப்பதுதான்.அன்பையும் ஆனந்தத்தையும் பாடலாக வெளியிட முடியாத வாழ்வு வாழ்க்கையல்ல.எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கைவிடுவதைச் சிரமமாக்குகின்றன.

★ஆனால்,தைரியமாக உண்மையைக் காண தயாராகிவிட வேண்டும்.நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் உன் வாழ்க்கையை முழுமையாகச் சிதைக்கின்றன என்பதை உணர வேண்டும்.கடவுள் ஒரு புனை கதை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.கடவுள் எந்தக் குறைவையும் இட்டு நிரப்பிச் சரிசெய்யப் போவதில்லை.கடவுள் எங்கேயுமில்லை.நீ இருக்கிறாய்-கடவுள் இல்லை.

:-ஓஷோ
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”