அலையாக இயங்கும் மனம் நிலைத்து இருப்பு நிலையாக

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

அலையாக இயங்கும் மனம் நிலைத்து இருப்பு நிலையாக

Post by marmayogi » Mon Dec 21, 2015 10:46 am

அலையாக இயங்கும் மனம் நிலைத்து இருப்பு நிலையாக

"மெய்ப்பொருளாகவும், இருப்பு நிலையாகவும், சுத்தவெளியாகவும் உள்ள இறைநிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலில்லாத குழந்தை வயதிலும், அந்த அரூப நிலையை யூகித்து உணர்ந்து கொள்ள ஏற்ற சிந்தனையாற்றல் உயராத மக்களுக்கும் தெய்வ நம்பிக்கையூட்டி அறிவுக்குப் பிடிப்பு கொடுப்பதற்காக, கண், காது, மூக்கு, முகம் உடைய உருவங்களைக் கற்பனை செய்து காட்டியும், அக்கற்பனை உருவங்களைக் கண்ணால் பார்க்கத்தக்க சிலைகளாகக் காட்டியும், பக்தி வழியில் கடவுள் என்று மனித மன இயல்பு அறிந்த பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள். நாம் எல்லாரும் நமது அறிவால் அத்தகைய வடிவங்களை நினைத்து நினைத்து அதுதான் தெய்வம் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு பழகியிருக்கிறோம்.
.

அந்தப் பழக்கம், தெய்வம் என்று எண்ணும்போதே நமது அறிவு அந்த சிலைவடிவமாகவோ, கற்பனை உருவங்களாகவோ வடிவம் எடுத்துக் காட்சியாகவும், சாட்சியாகவும் அமைகிறது. எந்த அறிவு ஒடுங்கி அரூபமாக, எல்லையற்றதாக தன்னை விரித்து இருப்பு நிலையடைந்து இறையுணர்வும், அறிவறியும் பேறும் பெற வேண்டுமோ, அதுவே தன்னை மாற்றி அமைத்துக் கொண்ட நிலையில் அழுத்தமாக நின்றால், எவ்வாறு அரூபமான தன்னையறியவும், அதுவே அகண்டாகார இருப்புநிலையாக உள்ள இறைநிலையை உணரவும் முடியும்? மனம் எல்லை கட்டி வடிவம் எடுத்தும், குணங்களாக மாறியும், அலையாக இயங்கும் நிலையிலிருந்து பயிற்சியால் அது நிலைத்து இருப்பு நிலையாக மாறும் அகத்தவப் பயிற்சியில் (குண்டலினியோகத்தில்) முழுமை பெற்றாலன்றி அறிவு தனது உண்மைநிலையை உணர்வது முடியாது.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

======================================

"கலையுணர்வால் மெய்ப்பொருளாம் கண்காணா ஒன்றினைக்
கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே
சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்
சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணர் வோம்.


- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”