நான் யார்?. (தன்னை உணர்தல்)
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
நான் யார்?. (தன்னை உணர்தல்)
"உன்னிலே நானடங்க என்னுளேநீ விளங்க
உனது அருள் ஒளிர எனதுள்ளம் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மந்தப் பிறப்பெய்தியதே முழுமை"
நான் யார் ? என்ற கேள்வியை எழுப்ப , தன்னை அறியும்
முயற்சி தான் மனிதனை மகிழ்வாக வாழச் செய்ய இன்றியமையாததாகும் .
இதுவே " தன்னை அறிதல்" , "தன்னுணர் நிலை" , "நான் யார்" என்பது.
நான் என்பது ரூபமா?
அரூபமா?
பொருளா?
சக்தியா?
உடலா?
மனமா?
அறிவா?
நான் எங்கே இருந்தேன்?
எப்படி இருந்தேன்?
ஏன் வந்தேன் ?
எங்கே வந்தேன்?
ஏன் இருக்கிறேன்?
எங்கு செல்வேன் ?
எப்படி முடிவேன்? என்று
மூலமும் , முடிவும் எதுவென அறிய ஆறாவது அறிவின் பண்பட்ட நிலையே தன்னுணர் நிலை .
இதனை உணர்ந்து கொள்ளும் போது இறைநிலையே நானாக என்னுளே அறிவாக விளங்குவது தெளிவாகும்.
மனஅலைகளின் சுழல் விரைவு குறைய குறைய மனத்தின் நிலைபொருளான அறிவாகி மனமே தரத்தில் உயருகிறது.
பிறகு மனம் அசைவற்று அறிவே அகக்காட்சியாகும்.
இங்குதான் " அவனே நான் , நானே அவன் " என்ற அறிவின் முழுமைப்பேறு கிட்டுகிறது .
:-வேதாத்திரி மகரிஷி