நான் யார்?. (தன்னை உணர்தல்)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

நான் யார்?. (தன்னை உணர்தல்)

Post by marmayogi » Wed Nov 11, 2015 8:06 pm

Image
"உன்னிலே நானடங்க என்னுளேநீ விளங்க

உனது அருள் ஒளிர எனதுள்ளம் தூய்மை பெற்றேன்

இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மந்தப் பிறப்பெய்தியதே முழுமை"

நான் யார் ? என்ற கேள்வியை எழுப்ப , தன்னை அறியும்
முயற்சி தான் மனிதனை மகிழ்வாக வாழச் செய்ய இன்றியமையாததாகும் .

இதுவே " தன்னை அறிதல்" , "தன்னுணர் நிலை" , "நான் யார்" என்பது.

நான் என்பது ரூபமா?

அரூபமா?

பொருளா?

சக்தியா?

உடலா?

மனமா?

அறிவா?

நான் எங்கே இருந்தேன்?

எப்படி இருந்தேன்?

ஏன் வந்தேன் ?

எங்கே வந்தேன்?

ஏன் இருக்கிறேன்?

எங்கு செல்வேன் ?

எப்படி முடிவேன்? என்று
மூலமும் , முடிவும் எதுவென அறிய ஆறாவது அறிவின் பண்பட்ட நிலையே தன்னுணர் நிலை .

இதனை உணர்ந்து கொள்ளும் போது இறைநிலையே நானாக என்னுளே அறிவாக விளங்குவது தெளிவாகும்.
மனஅலைகளின் சுழல் விரைவு குறைய குறைய மனத்தின் நிலைபொருளான அறிவாகி மனமே தரத்தில் உயருகிறது.
பிறகு மனம் அசைவற்று அறிவே அகக்காட்சியாகும்.

இங்குதான் " அவனே நான் , நானே அவன் " என்ற அறிவின் முழுமைப்பேறு கிட்டுகிறது .

:-வேதாத்திரி மகரிஷி
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”