உனக்கு அறிவு இருக்கா என்று யாராவது கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உனக்கு அறிவு இருக்கா என்று யாராவது கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?.

Post by marmayogi » Sat Oct 31, 2015 9:00 am

நான் diploma படிக்கும் போது ஒரு ஆசிரியர் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். அது என்ன கேள்வி என்றால் "உனக்கு அறிவு இருக்கா"

எனக்கு சுர்றுனு வந்துசி பாருங்க கோபம். சார் நான் எட்டாவது அறிவை எட்டவில்லை.எந்த அறிவை கேட்டீர்கள் ?.


1).ஓர் அறிவு(தொடு உணர்வு)- தாவரம், அமீபா( சிற்றுயிர்)

2).இரண்டாவது அறிவு(தொடு உணர்வு,சுவை)-புழு

3) மூன்றாவது அறிவு(வாசனை,தொடு உணர்வு,சுவை)- எறும்பு,பூரான்,கரையான்,

4)நான்காவது அறிவு(தொடு உணர்வு, சுவை ,வாசனை,பார்த்தல்)- பாம்பு , பல்லி, ஓணான்


5)ஐந்தாவது அறிவு(தொடு உணர்வு ,சுவை ,வாசனை,பார்த்தல்,கேட்டல்)-விலங்குகள்

6)ஆறாவது அறிவு (தொடு உணர்வு ,சுவை ,வாசனை,பார்த்தல்,கேட்டல்,சிந்திக்கும் அறிவு) - மனிதன்


இதில் எந்த அறிவை வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள் என்று நான் சொன்னேன்.

உனக்கு அறிவு இருக்கா? என்று
யாராவது உங்களை பார்த்து கேட்டால். உங்களுக்கு 1ஆவது அறிவு வேண்டுமா ?. இரண்டாவது அறிவு வேண்டுமா?. மூன்றாவது அறிவு வேண்டுமா,4,5,6..அறிவு வேண்டுமா ?. எந்த அறிவு வேண்டும் என கேட்க வேண்டும் . ஏனெனில் அவர்களுக்கு ஆறு அறிவை பற்றி தெரியாது.



இன்னும் இரண்டு அறிவு உள்ளது

7ஆம் அறிவு- தெய்வங்கள்


8 ஆம் அறிவு( எட்டாத அறிவை எட்டி பிடிக்கும் அறிவு எட்டாம் அறிவு )- மகான்கள் , ஞானிகள் ,சித்தர்கள்

நாம் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் எட்டாம் அறிவில் விடை கிடைக்கும்.


இவர்களே கடவுள் நிலைக்கு உயர்ந்தவர்கள்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”