ரசமணி கட்டும் வித்தை பற்றி சித்தர் பாடல்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

ரசமணி கட்டும் வித்தை பற்றி சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Sun Sep 20, 2015 2:14 pm

"பாரு நீ சந்தா னத்தின்
பருமணி மார்க்கம் கேளு
வாரு நீ துண்டு துண்டாய்
மனிதரை வெட்டிப் போட்டு
சேரு நீ குளிகை காட்டி
செனதிலே பொருந்திப் பேசும்
காரு நீ மணி யினாலே
கடும் யோகா சித்தியாமே"

- கொங்கணவர் -

விந்துவென்ற சூதத்தில் மந்திரமோ சித்தி
மேகத்திலோடுகின்ற குளிகை சித்தி
அந்து மென்ற யோகமுதல் ஞான சித்தி
அப்பனே காயசித்தி லோகசித்தி
சாஸ்திரத்தில் சொல்லாத கருவோசித்தி
விந்து கொண்ட வாதத்திலட்டாங்க சித்தி
பாரப்பா சூதத்தைக் கட்டினோர்க்கே

:- சட்டமுனி

கல்லான காயசித்தி கற்பமொடுரசவாதம்
அஞ்சான குளிகை கல்லான கெளனமாங்குளிகையோடு
கனமான சர்வநோய் எல்லாம் மைந்தா
சொல்லான சூதத்தை விட்டால் வேறு
சொல்லுக்கும் வல்லவரார் சொல்லக்கேளு
சொல்லவே சித்தர்கள் தான் பதிநென்பேரும்
சிவவிந்தை கட்டியல்லோ திறமானாரே

:- போகர்

கேளப்பா கேசரமே அண்டவுச்சி
கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம்ம யோகமேன்று
அடுக்கையிலே போதமுந்தான் உயரத்தூக்கும்
வாளப்பா கெவுனமணி விந்து நாதம்
வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டுபோகும்
நாளப்பா அண்டமெல்லாஞ் சுத்தியோடும்
நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே

:- காகபுசுண்டர்

தானென்ற ஞானிக்கு குளிகைஒன்று
சாற்றுகிறேன் புலத்தியனே சார்ந்துகேளு
தேனன்ற விந்துவல்லோ ரசமாகும்
திரண்டு மணியாவத்ற்கு வகையைக்கேளு
மானென்ற அக்கினியே புடமுமாகும்
ஊநென்ற சடத்திலே மனிபோல்செய்து
உத்தமனே கெவுனத்தில் ஓடலாமே

:-அகத்தியர்

ஓகோகோ சொக்குவிக்கும் மணியின் மார்க்கம்
காடெல்லாந்திரிந்தலைந்து ரசத்தைவாங்கி
கட்டி யொரு மணியாகச் செய்வேனென்று
நாடெல்லாமலை வார்கள் உலுத்தமான்பர்
நாடென்ற வனிடத்தில் நரகமெய்தும்
பாடெல்லாம் பட்டல்லோ விந்தைக்கட்ட
பரப்பிரம மணியாகும் பாருபாரு.

:-அகத்தியர்

ஆமென்ற ரசமணியின் வேகத்தாலே
அண்டர்களும் முனிவர்களும் மயங்கினார்கள்
தேனென்ற இம்முரையைச் சொன்னதல்லாங்
உள்லொன்று வைத்ததிருக்கும் உலுத்தர்க்கும்
உற்பனமாயிம் முறையைச் சொல்வாரானால்
காணென்ற கழுதையுட சென்ம்மாகி
கடைப்பிறப்பாய் பிறந்திடுவார் கருதிப்பாரே

:-அகத்தியர்

சொக்கவே அண்டமுதல் திசைகள்லெட்டும்
சுழண்டு வரும் நிமிசத்தில் மணியின்வேகம்
தாக்கவே முன்போலக் கதவைமூட
சனத்திலே கம்பு நுனிமேலே செல்லும்
சிக்கென கதவு நுனி சற்றே நீக்கி
சனத்திலே யோடிவரும் மனிதானப்பா
காக்கவே ரசமணியின் மார்க்கஞ்சொன்னேன்
கண்டுகொள் இந்த நூல் தன்னிலாமே

:-அகத்தியர்

ஏருமடா அண்டத்தில் மணியின் வேகம்
உண்ணவே முனைநாக்கை அறைவாசிவாங்க
ஏறிவருங் கபாலத்தில் மனிதானப்பா
கண்டவுடன் அவ்விடத்தில் மணியைவைத்து
கபால வரை பெறுவாசல் மூடும்போது
நண்னவே சடலத்தை யுயரத்தூக்கி
நாலுரெண்டு வரை வரைக்கும் சொக்குவிக்கும்பாரே

:-அகத்தியர்

பாரப்பா விந்து மணி வாசிகூட
பட்ரென்றேஇறங்கிவிடும் பீஜத்துள்ளே
காரப்பா நந்தியுட வழியிற் செல்லும்
காணதற்க்குள் சுழண்டுமணி சிக்கிக் கொள்ளும்
ஆரப்பா அவ்விடத்தில் அக்கினியின் வீடு
அப்பவல்லோ அன்னாக்கைத் திறந்துமூடி
சேரப்பா நூற்றுஎட்டுதிரம் திறந்துமூடி
சிவந்துருகி வளமாகும் சாரனையாமென்னே
:-அகத்தியர்

ஐயையோ கண்ணிமைக்குள் அடங்குமோசொல்
பதிகமென்ற விந்துவைத்தான் வாசிதானும்
பாம்பரம் போல்சுத்தியல்லோ மணிபோல்பண்ணும்
அதிகமென்ற விந்துமணி சாரனையே செய்ய
காட்டுகிறேன் புலத்தியனே கருதிக்கேளு
அதிகமென்ற நுனிநாக்கை யனுப்போல் நீக்கி
உருண்டுவரும் மணியுடணே வாசிபாரே

:-அகத்தியர்

பாரப்பா விந்துவைத்தான் மனியாய்ச்செய்ய
பாடுகிறேன் புலத்தியனே ஐயாகேளு
வீரப்பாவுன்னிடத்தில் வாசி தன்னை
வீரமாகப் பீஜத்துள் அடக்கியேத்து
காரப்பா வாசிதன்னை தம்பஞ்செய்து
காட்டுகிறேன் கபாலத்தில் கண்டுகொள்ளு
வீரப்பா நுனிநாக்கை அன்னாக்கில் மோதி
விளங்குகின்ற தாமர்தன்னையும் அடைத்துபாரே

:-அகத்தியர்


ரசமணியை நமது உடம்பிற்குள்ளேயே உருவாக்க வேண்டும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். மனிதரை துண்டு துண்டாய் வெட்டினாலும் மீண்டும் வெட்டுப்பட்ட துண்டுகளை ஒட்ட வைக்க முடியுமாம். அதுதான் ரசமணியின் மகிமை
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”