மனம் எனும் ஓர் பேய் குரங்கு(மனம் ஒரு சைத்தான் அதை நாம் அடக்கவில்லையெனில் அது நம்மை அடக்கிவிடும்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

மனம் எனும் ஓர் பேய் குரங்கு(மனம் ஒரு சைத்தான் அதை நாம் அடக்கவில்லையெனில் அது நம்மை அடக்கிவிடும்

Post by marmayogi » Fri Sep 11, 2015 7:49 pm

மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை பயலே நீதான்
மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்
இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய்
இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை ஆனாலோ
திணை அளவு உன் அதிகாரம் செல்ல வோட்டேன் உலகம்
சிரிக்க உன்னை அடக்கிடுவேன் திருவருளார் கணத்தே
நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய்
ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.

பன் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச பயலே
பதையாதே சிதையாதே பார்க்குமிடம் எல்லாம்
கொன் முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது
குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது
என் முன் ஓர் புல் முனை மேல் இருந்த பனி துளி நீ
இம் எனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ
பின் முன் என நினையேல் காண் சிற்ச் சபையில் நடிக்கும்
பெரிய தனித் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே.

விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டுப் பயலே
விரிந்து விரிந்து அலையாதே மெலியாதே விடயம்
புரிந்த நெறி புரிந்தவமே போகாதே பொறி வாய்ப்
புரியாதே விரையாதே புகுந்து மயங்காதே
தெரிந்து தெளிந்து ஒரு நிலையிற் சித்திரம் போல் இரு நீ
சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்
பரிந்து எனை நீ யாரென்று பார்த்தாய் சிற்ச் சபை வாழ்
பத்தி தனக்கே அருட் பட்டம் பலித்த பிள்ளை நானே.

பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டுப் பயலே
பல் போறியாம் படுக் காளிப் பயல்களோடுங் கூடி
சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி
தியங்காதே ஒரு வார்த்தை திரு வார்த்தை எனவே
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனைத்தான்
அடியோடு வெரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை
பேய் மதியா நீ எனைத்தான் அறியாயோ எல்லாம்
பெற்றவன் தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே. - வள்ளலார்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”