மந்திரமாவது தந்திரமாவதுsatkunan wrote:அந்த மந்திரத்தை ஆதி சார் எனக்கு தான் சொல்வார்
சொல்ல வேண்டியதை சொல்லியாற்றி, அதை
சிந்தைக்குள் இட்டு நெற்றியில் கூட்டுவது, உம்பாடே
=============================================
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே!
- அகத்தியர்
marmayogi wrote:
இல்லை இல்லை. எனக்கு மட்டுமே அந்த மந்திரத்தை சொல்வார். நீங்க கம்முனு click பன்னுற work அ பாருங்க.
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
ஒவ்வொரு கடவுளையும் வசியம் செய்ய மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்யவும் மந்திரம் உள்ளது. சிவனை வசியம் செய்தால் மரணம் இல்லை. சூரியனை வசியம் செய்தால் உணவு தேவையில்லை . சூரியனிடமிருந்து ஆற்றலை வாங்கி கொள்ளலாம். மழையை வசியம் செய்தால் மாதத்திற்கு மூன்று நாட்கள் மழையை வரவழைக்க முடியும். காற்றை வசியம் செய்தால் காற்று இல்லாமல் பல்லாயிரம் வருடங்கள் உயிர் வாழ முடியும்.
எந்த கடவுளை வசியம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் உண்டு. அதே போல செல்வத்தை தரும் லக்ஷ்மி யை வசியம் செய்யவும் சித்தர்கள் மந்திரங்களை கண்டுபிடித்து உள்ளனர்.
நான் ஒரு மந்திரம் சொல்கிறேன் அதை தினமும் சொல்லுங்கள்.
ஓம் ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்
மஹாலக்ஷ்மியே ராகஜ் ஆகஜ்
மம கிரஹ திஷ்ட் திஷ்ட் ஸ்வாஹா.
திருப்பதி உண்டியலில் கோடி கோடியாக மக்கள் பணத்தை கொட்டுகிறார்களே அதற்கு என்ன காரணம் என்று யாருக்காவது தெரியுமா ??????.
திருப்பதி சிலைக்கு அடியில் ஒரு மந்திர தகடு ஒன்று உள்ளது. அந்த மந்திர தகடு தான் இந்த வேலையை செய்கிறது. அதே போல அங்கு கொங்கணர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மக்கள் இதை அறிந்து கொள்ளாமல் கடவுளுக்கு பணத்தை வாரி வழங்குகிறார்கள். கடவுள் தான் நமக்கு பணத்தை கொடுக்க வேண்டும் ஆனால் மக்கள் கடவுளுக்கு பணத்தை வழங்குகிறார்கள். நமக்குள் சகலவிதமான சக்திகள் அடங்கி ஒடுங்கி உள்ளது . இரும்பை தங்கமாக்கும் வித்தை உங்களுக்கு தெரியுமா ????. இரும்பை தங்கமாக்கும் வித்தை ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியும் .மனிதனாக பிறந்த எல்லோரும் அதை செய்ய முடியும் . இரும்பை தங்கமாக்கும் வித்தை ரகசியமாக செய்தால் நமக்கு நல்லது . இல்லையேல் வெளிநாட்டுகாரன் நம்மல கூட்டிகிட்டு போயி!!! உனக்கு தங்கமாக்கும் வித்தை தெரியுமாமே!! தங்கமாக்கு பாக்கலாம் என்று சொல்லிகொண்டு இருப்பான்.
அஞ்கோடி மந்திர முஞ்சுளே யடக்கினால்
நெஞ்சுகூற வும்முளே நினைப்பதோ ரெழுத்துளே
அஞ்சுநாலு மூன்றதாகி யும்முளே யடங்கினால்
அஞ்சுமோ ரெழுத்ததா யமைந்ததே சிவாயமே
என்று ஐந்து கோடி மந்திரங்களும் ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்து மனதில் செம்மையானால், அதில் உள்ளடங்கி நன்மையளிக்கும் பெருமையைக் கூறுகின்றார், சிவவாக்கியர்.
கேள்வியும் நானே பதிலும் நானே???
நமக்குள்ளே அனைத்து சக்தியும் அடங்கியிருக்கையில், திருப்பதிக்கும் கொடுக்கலாம் திருவண்ணாமலைக்கும் கொடுக்கலாம் தப்பில்லையே.
மனதினை இறைநிலைப்படுத்துவது என்பது அத்தனை ஆசையையும் இழப்பதுதானே, அங்கு பிடுங்குவதுதானே இறை இயல்பு.