அமெரிக்க அரசாங்கத்தை நடுங்க வைத்த ஓஷோ ரஜினீஷ் (ஒருபக்க வரலாறு):-
★1981-ம் ஆண்டு மருத்துவத்துக்காக
அமெரிக்கா சென்ற ரஜனீஷ் , சீடர்களின்
அன்புக்கு இணங்க ஆசிரமம் தொடங்கி
அங்கேயே தங்கினார். ரஜனீஷின்
புரட்சிக் கருத்துகளால்
விரைவிலேயே ஆசிரமம் புகழடைந்து
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
வரத் தொடங்கினர்.
★ ‘ரஜனீஷ்புரம்’ எனப்
பெயரிடப்பட்ட ஆசிரமத்தில் வீடுகள்,
தியான மண்டபங்கள்,
சாலைகள், மருத்துவமனைகள்,
பள்ளிகள் தொடங்கப்பட்டு, குட்டியாக
ஒரு விமான நிலையமும்
ஏற்படுத்தப்பட்டது. பரிசுகளாக வந்த 93
ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் தினம் ஒன்றைப்
பயன்படுத்திய ரஜனீஷ் , ஒரு தனி
ராஜாங்கமே
நடத்திக்கொண்டு இருந்தார்.
★உலகின் மதிப்புமிக்க காராக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும்.உலகில் உள்ள பெரும் புள்ளிகளிடம் மட்டுமே இருக்கக்கூடிய இந்த கார் யாரிடமும் பணம் கோடி கோடியாக கொட்டிக்கிடந்தாலும் அவ்வளவு சுலபத்தில் அனைவராலும் வாங்கி விட இயலாது.வாங்குபவர்களில் பின்புலம்,குடும்பம் ,பெரும் புள்ளிகளுக்கு காரை விற்பனை செய்வதால் தன் நிறுவனத்திற்கு கிடைக்கவிருக்கும் புகழ்போன்றவற்றை தீர விசாரித்த பிறகே அதனை விற்பனை செய்வார்கள்.
தங்களின் சொத்துக்களை ஆசிரமத்துக்கு
எழுதிவைத்து ரஜனீஷிடம் தஞ்ச
மடையும் அமெரிக்கர்கள் அதிகரிக்கவே
அதிர்ச்சியடைந்த அமெரிக்க அரசு,
ஆசிரமத்தை முடக்கும் வேலைகளில்
இறங்கியது.
★ரஜனீஷின் ஆசிரமத்தில் 1984-
ம் வருடம் ஆயிரக்கணக்கான சீடர்கள்
தற்கொலைக்கு முயன்றதாக
பொய்க்குற்றச்சாட்டைப் பரப்பியது. அதே
நேரம், ஆசிரம நிர்வாகி ஷீலா
பெரும் சொத்துக்களுடன்
தலைமறைவாகிவிடவே,
ஆசிரமத்துக்குள் நுழைந்தது
போலீஸ் ‘அமெரிக்க அரசு சதிவலை
பின்னுகிறது, தப்பிச் செல்லுங்கள்’
என்று சீடர்கள் ரஜினீசிடம் கெஞ்சினார்கள்.
★அத்தனை நாளும் சீடர்களுக்கு போதித்த
‘பிரச்னைகளைக் கண்டு விலகி
ஓடாதீர்கள்... எதிர்கொண்டு வெற்றி
பெறுங்கள்’ என்ற மந்திரத்தையே உரக்கச்
சொன்னார் ரஜனீஷ்.
ஆசிரமத்தில் ஊழலும், விசாவில்
மோசடியும் இருப்பதாக ரஜனீஷை
கைது செய்துவலுக்கட்டாயமாக
நாட்டைவிட்டு வெளியேற்றியது
அமெரிக்க அரசு.
★1931-ம் ஆண்டு மத்தியப் பிரேதசத்தில்
குச்வாடா என்ற சிறிய கிராமத்தில்
ஜெயின் தம்பதியருக்கு மகனாகப்
பிறந்தார் ரஜனீஷ் சந்திரேமாகன்.
‘ஏழாவது
வயதில் மரணமைடந்துவிடுவார்’ என
ஜோசியர் கணிக்கவே, பயந்துபோன
பெற்றோர், அரை பாட்டி வீட்டுக்கு
அனுப்பினர். ஏழு வயதுவரை சுதந்திரப்
பறவையாகத் திரிந்தவருக்கு இனி
மரணம் வராது என ஜோதிடர்
சொன்னபிறகே படிக்கவைத்தனர்.
1953-ம் வருடம் தத்துவம் படித்தபோது,
தன்னிடம் ஒரு தனித்துவம் இருப்தை
உணர்ந்தார் ரஜனீஷ். பிறகு பல்கலைக்
கழகத்தில் விரிவுரையாளராகச்
சேர்ந்ததும், சிறு கூட்டத்தினரிடம்
பேசத் தொடங்கினார்.
★அந்த வட்டம்
விரிவடையவே, வேலையை
விடுத்து, ‘பகவான் ரஜனீஷ் ’ ஆக மாறி
மும்பையிலும் பின்னர் பூனே விலும்
ஆசிரமம் அமைத்துப் பரபரப்பாகச்
செயல்படத் தொடங்கினார்.
எல்லா மதமும் செக்ஸுக்கு அதிகக்
கட்டுப்பாடுகள் விதித்தபோது,
‘செக்ஸை ஒரு பிரச்னையாக
நினைத்து விலகி ஓடாதீர்கள். அதனை
முழுமையாக
அனுபவித்து வெற்றிகொள்ளுங்கள்’
என்று ரஜனீஷ் சொன்னது
இந்தியாவெங்கும் அதிர்ச்சியலையை
ஏற்படுத்தியது. ‘செக்ஸ் சாமியார்’ என்ற
பெயர் சூட்டி,
கடுமையாக விமர்சித்தனர்.
இந் நேரம் கடுமையான
முதுகுவலியும் சர்க்கரை
நோயும் ஏற்படவே, சிகிச்சைக்காக
அமெரிக்கா சென்றார், அங்கே மக்களது
ஆதரவுடன்
ஆன்மிகப் புரட்சியை உண்டாக்கவே
மறுபடியும் நாடு கடத்தப்பட்டார்.
செக்ஸ் புரட்சியாளர், போதை அடிமை
என அமெரிக்கா திட்டமிட்டு வதந்தி
பரப்பியிருந்ததால், சுற்றுலா
விசாவில் ஜேர்மனி போன ரஜனீஷ் ,
துப்பாக்கி
முனையில் நாடு கடத்தப்பட்டார்.
★முதலில் குடியுரிமை வழங்கிய
உருகுவே
அரசாங்கம் அமெரிக்காவின் கடன் மற்றும்
பொருளாதாரத் தடை மிரட்டலால்
ரஜனீஷிக்கு வழங்கிய
குடியுரிமையைத் திரும்பப்
பெற்றது.அதனால், 1987-ம் ஆண்டு மீண்டும்
இந்தியாவுக்குத் திரும்பி பூனே
ஆசிரமத்தில்
பணியைத் தொடர்ந்தார். ரஜனீஷ் என்ற
பெயரை, ‘ஓஷோ’ என்று மாற்றி,
‘வாழ்க்கையை
அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்,
பிரச்னைகளைக் கண்டு விலகி
ஓடினால் அது இன்னும் பெரிதாகும்.
அதனால், எதிர்த்து நின்று வெற்றி
பெறுங்கள்’ என்று தினமும் பிரசங்கமும்
தியானமும் நடத்தி மக்களிடம் நம்பிக்கை
விதைத்தார்.
★1990-ம் ஆண்டு நாடித்துடிப்பு
குறையத் தொடங்கிய நேரத்தில்,
‘மரணத்தில் இருந்து என்னை தப்பவைக்க
நினைக்காதீர்கள், நான் அதனை
நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்’
என்று மருத்துவ சிகிச்சயை மறுத்து
மரணமடைந்தார்.ஓஷொ இந்த யுகத்தில்தில் ஞானம் அடைந்த
ஞானி.அவரை பற்றி தப்பான
பரப்புரைகலை பரப்பி நம் நாடு செக்ஸ்
சாமியார்
என்றது.சிற்றின்பதிலிருந்து கடந்து
பேரின்பதை அடைவது எப்படி
என்றுதான்
அவர் கூறி வந்தார்.சிற்றின்பத்தை பற்றி
முழுமையாக தெரிந்து அதில்
ஒன்றும் இல்லை என்ற உணர்ந்த பின் தான்
பேரின்பத்தை அடைய
முடியும்,உண்மை யார் என்பது நிகல்
காலதில் தெரியாது.
உண்ணும் உணவில் ஓஷொவிற்கு விஷம்:
மலேசியாவில் வெளிவந்த ஒரு கட்டுரை – இதில் ஓஷோவிற்கு விஷம் கொடுத்தது பற்றிய குறிப்பு உள்ளது.
நான் “அராபட் – மிகக் மோசமான கொலை(Arafat: Murder most foul)” என்ற புத்தகத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
இதில் கூறுவது உண்மையாக இருக்கும் சாத்தியம் மிக அதிகம்.
★அராபட், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் திட்டங்களை நிறைவேற்றும் சிஐஏ – விற்கும் மிகப்பெரிய தடையாக இருந்தார்.எல்லா விஷங்களைப் பற்றியுமான மிக நுண்ணிய விஞ்ஞான ஆய்வுகளைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, உடலில் எந்தவிதத் தடயமும் கண்டுபிடிக்க முடியாமல் சில வருடங்களில் இறந்துவிடும் படியான விஷத்தை ஒருவனுக்கு கொடுக்க முடியும். அதேசமயம் மனிதகுல காப்பாளர் என்ற பொய்முகத்தை காத்துக் கொள்ளவும் முடியும்.
★ஓஷோ, மிகப் பிரபலமான இந்திய ஞானியான இவருக்கு, 1985-ல் இதேபோன்று விஷம் கொடுக்கப்பட்டதான குற்றச்சாட்டு உள்ளது. அவர் அமெரிக்காவின் ஓரகன் மாவட்டத்தில் ஒரு புதிய கம்யூன் அமைத்தார், அங்கு மக்களை தங்களுக்காக தாங்களே சிந்தித்து செயல்படச் சொன்னார். பலவிதமான மக்களும் அந்த கம்யூனிற்கு வந்தனர், முக்கியமாக ஓஷோவின் அன்பு மற்றும் தியானம் பற்றிய அணுகுமுறை அதற்குக் காரணமாக இருந்தது.
★திடீரென ஓஷோ ஆபத்தான பார்வை கொண்டவராகவும், அவரை விலக்குவது அவசியம் என்றும் அமெரிக்காவால் கருதப்பட்டது. 1985-ல் அவர் காரணம் கூறாமல் கைது செய்யப்பட்டு பல நாட்களுக்கு யாருமறியாதபடி பல்வேறு சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டார்.
★அவருக்கு ஓக்லஹோமா என்ற சிறைச்சாலையில் தாலியம் என்ற விஷம் கொடுக்கப்பட்டது, கடுமையான கதிர்வீச்சுக்கும் உட்படுத்தப்பட்டார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் அதன்பின் தாலியத்தின் பாதிப்பை ஒத்த உடல் பாதிப்புகளை அடைந்ததற்கு மருத்துவ சான்றுகள் உள்ளன. ஆனால் ஒரு வருடத்தில் தாலியத்தின் தடயம் முழுவதும் அகன்று விட்டது, பாதிப்புகள் மட்டுமே தொடர்ந்தன.
★பல்வேறு மருத்துவ சோதனைகள் லண்டனில் செய்யப்பட்டது, அவருக்கு யாரால் எங்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது என்பது பற்றிய குறிப்புகள் உள்ளன. ஓஷோ 1990-ல் தாலிய விஷ பாதிப்பால் இறந்துபோனார்.
★ஓஷோ, அராபட், லிட்வினென்கோ போன்றவர்கள் இப்படி சதித்திட்டத்தால் கொல்லப்பட வேண்டியவர்களல்ல. தாலியம் மற்றும் பொலோனியம்210 போன்ற விஷங்கள் ஒருசிலரின் கைகளிலேயே இருக்கிறது என்று தெரிந்தும், எப்படி இந்த சதிக் கொலைகளுக்கு ஒருவர் மேலுமே குற்றம் சாட்டாமல் இருக்க முடியும்.
★இதற்குக் காரணமானவர்கள் அதிகாரம் மிக்க நாடுகளின் அதிகார அமைப்புகளின் பின்ணணியில் உள்ளவர்களே. நான் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஐ.நா.சபைக்கு இந்த சதிகளை விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்க அழைக்கிறேன், இந்த சதிகளைச் செய்தவர்கள் அதன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
★ஓஷோவின் – யூ ட்யூப் – என்ற வீடியோ இணையதளத்தில் இரண்டு கோடியே முப்பது லட்சம் முறை ஓஷோ வீடியோக்கள் பார்க்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 12 மாதங்களில் மட்டும் ஐம்பது லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, ஓஷோ வீடியோக்கள் இப்போது தமிழ் உட்பட பல்வேறு மொழியாக்கத்தோடு காணக்கிடைக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தை நடுங்க வைத்த ஓஷோ ரஜினீஷ்
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: அமெரிக்க அரசாங்கத்தை நடுங்க வைத்த ஓஷோ ரஜினீஷ்
ஞான நிலையை அடைதல் உன் இருப்பிற்கு
நூறு சதவீதம் ஒரு புத்தொளியை,புத்துயிரை,
புது சிரிப்பைக் உனக்குள் கொண்டுவருகிறது
பிரபஞ்ச இருப்பு எப்போதும் தேவைக்கு மேல்தான் தருகிறது. ஆகவே நீயும் பிரபஞ்ச இருப்பின் பகுதியாய் மாற விரும்பினால் அதுதான் முக்திநிலை அடைவது.-முழுமையின் பகுதியாய் மாறுவது.- நீ ஒரு கருமியாய் இருக்க முடியாது.
நீ மக்களை அடைந்தே ஆக வேண்டும். அவர்கள் உன்னை தடுக்கலாம். ஏனெனில் குருட்டு மனிதன் ஒளியைப் பற்றி கேட்க விரும்பமாட்டான். ஏனெனில் அது அவன் குருடன் என்பதை மீண்டும் அவனுக்கு உணர வைப்பதால் அது (ஒளி பற்றிய பேச்சு) அவனுக்கு வலிக்கும்.
ஆனால் இதுதான் பிரச்சனை! குருடனிடம் ஒளி பற்றி நீ பேசினால், அவனைக் காயப்படுத்துவதால்,அவன் உன்னிடம் கோபப்படுவான்.
ஆனால் அப்படி காயப்படுத்தாமல் உன்னால் அவனுக்கு உதவ முடியாது. நீ அவனை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல முடியாது. அவனைக் குணப்படுத்த உதவ முடியாது. ஒளியின் உலகை,அழகை,வண்ணங்களை அவனுக்குத் தர முடியாது.
வாழ்வின் எண்பது சதவீதம் கண்களைப் பொறுத்ததுதான். ஒரு குருடன் இருபது சதவீதம் தான் வாழ்கிறான். இது இந்த சாதரண குருட்டுத்தனம். ஆனால் ஞானநிலை அறியாதவன் ஒருபோதும் ஆன்மீக உலகைக் காண்பதேயில்லை.
ஞான முக்திநிலை.,உன் பிரபஞ்ச இருப்பிற்கு நூறு சதவீதம் ஒரு புத்தொளியை,புத்துயிரை,புது சிரிப்பைக் கொண்டுவருகிறது.
-- ஓஷோ --
நூறு சதவீதம் ஒரு புத்தொளியை,புத்துயிரை,
புது சிரிப்பைக் உனக்குள் கொண்டுவருகிறது
பிரபஞ்ச இருப்பு எப்போதும் தேவைக்கு மேல்தான் தருகிறது. ஆகவே நீயும் பிரபஞ்ச இருப்பின் பகுதியாய் மாற விரும்பினால் அதுதான் முக்திநிலை அடைவது.-முழுமையின் பகுதியாய் மாறுவது.- நீ ஒரு கருமியாய் இருக்க முடியாது.
நீ மக்களை அடைந்தே ஆக வேண்டும். அவர்கள் உன்னை தடுக்கலாம். ஏனெனில் குருட்டு மனிதன் ஒளியைப் பற்றி கேட்க விரும்பமாட்டான். ஏனெனில் அது அவன் குருடன் என்பதை மீண்டும் அவனுக்கு உணர வைப்பதால் அது (ஒளி பற்றிய பேச்சு) அவனுக்கு வலிக்கும்.
ஆனால் இதுதான் பிரச்சனை! குருடனிடம் ஒளி பற்றி நீ பேசினால், அவனைக் காயப்படுத்துவதால்,அவன் உன்னிடம் கோபப்படுவான்.
ஆனால் அப்படி காயப்படுத்தாமல் உன்னால் அவனுக்கு உதவ முடியாது. நீ அவனை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல முடியாது. அவனைக் குணப்படுத்த உதவ முடியாது. ஒளியின் உலகை,அழகை,வண்ணங்களை அவனுக்குத் தர முடியாது.
வாழ்வின் எண்பது சதவீதம் கண்களைப் பொறுத்ததுதான். ஒரு குருடன் இருபது சதவீதம் தான் வாழ்கிறான். இது இந்த சாதரண குருட்டுத்தனம். ஆனால் ஞானநிலை அறியாதவன் ஒருபோதும் ஆன்மீக உலகைக் காண்பதேயில்லை.
ஞான முக்திநிலை.,உன் பிரபஞ்ச இருப்பிற்கு நூறு சதவீதம் ஒரு புத்தொளியை,புத்துயிரை,புது சிரிப்பைக் கொண்டுவருகிறது.
-- ஓஷோ --
-
- Cash on hand: Locked
Re: அமெரிக்க அரசாங்கத்தை நடுங்க வைத்த ஓஷோ ரஜினீஷ்
அனைத்தும் புதிய செய்திகள் எனக்கு.
ஆரம்பகாலத்தில் நானும் அவரை "செக்ஸ் சாமியாா்" என்றே நினைத்துவந்தேன். போகப்போக அவரது கருத்துகளை படிக்கப் படிக்க அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
ஆரம்பகாலத்தில் நானும் அவரை "செக்ஸ் சாமியாா்" என்றே நினைத்துவந்தேன். போகப்போக அவரது கருத்துகளை படிக்கப் படிக்க அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: அமெரிக்க அரசாங்கத்தை நடுங்க வைத்த ஓஷோ ரஜினீஷ்
காமத்திலிருந்து கடவுளுக்கு
நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறே
ன். உண்மையில் எழுதியதல்ல. என்
பேச்சை தொகுத்து
எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு,
"காமத்திலிருந்து கடவுளுக்கு".
அதற்கு பிறகு என்னுடைய நூற்றுக்
கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு
விட்டன. ஆனால், மற்றவற்றை
படித்தார்களா என்பது சந்தேகம்தான்.
குறிப்பாக இந்தியாவில் எல்லாரும்
படித்ததுகாமத்திலிருந்து
கடவுளுக்கு என்ற
புத்தகைத்தான். அவர்கள் எல்லாரும்
அதை விமர்சனம்
செய்தார்கள்.எதிர்த்தார்கள்.இன்னும் அதை
பற்றி கட்டுரைகளும், மறுப்பு
நூல்களும் எழுதி கொண்டுதான்
இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை
மறுத்து கொண்டே வருகிறார்கள். மற்ற
புத்தகங்களை பார்க்கவும் இல்லை.
குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா?
நான் ஏதோ ஒரே புத்தகத்தைதான்
எழுதியது போல.
மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள்.
காமமே காயமாகி விட்டது. அதை
குணப்படுத்தியாக வேண்டும்.
உடலுறவில் ஏற்படும் பரவசம்,
தியானத்தின் ஒரு சிறு பகுதியின்
ஆரம்பத்தை, உங்களுக்கு அடையாளம்
காட்டிவிடும்.காரணம்,அப்போது மனம்
நின்று விடுகிறது.காலம் நின்று
விடுகிறது.அந்த சில வினாடிகளில்
காலமும் இருப்பதில்லை.மனமும்
இருப்பதில்லை.நீங்கள் பரிபூரண
மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து
விடுகிறீர்கள். அது,அந்த விஷயம் பற்றிய
என் அறிவியல் அணுகுமுறை.
காரணம்,மனமற்ற நிலைக்கும்,பரவச
நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான
வேறு வழி எதுவுமே இல்லை.மனம்
கடந்தும்,காலம் கடந்தும் செல்வதற்கு
வழி இருக்கிறது என்பதை புரிந்து
கொள்வதற்கு,உடலுறவு தவிர
வேறு வழியில்லை.தியானத்தின்
முதல் அடையாளத்தை நிச்சயமாக
அதுதான் காட்டுகிறது.நான்
மக்களுக்கு இந்த உண்மையை
சொல்வதால்தான் உலகமே என்னை
கண்டனம்
செய்கிறது.
காமத்திலிருந்து அதி பிரக்ஜைக்கு
செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம்
முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்
டேன். கண்டிக்கப்பட்டேன். ஏன்
கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த
விளக்கத்தையும் யாரும்
கொடுக்கவில்லை. என் புத்தகம்,
முப்பத்து நான்கு மொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு
பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லா
சன்னியாசிகளும் அதை படித்து
விட்டார்கள்.
இந்து,சமண,கிறித்துவ,புத்த
சன்னியாசிகள் என்று யாராக
இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்த
புத்தகத்திற்கு சிறந்த
வாடிக்கையாளர்கள். சில
மாதங்களுக்கு முன்பு, இங்கே
புனாவில் சமண மாநாடு ஒன்று
நடந்தது.என் செயலாளர் ஆச்சரியமான
விஷயம் ஒன்று சொன்னார்.சமண
சன்னியாசிகள் இங்கே வந்து அந்த
புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள்.காம
த்திலிருந்து கடவுளுக்கு.அதை
வாங்கி தமது ஆடைக்குள் மறைந்து
வைத்து கொண்டு சத்தமில்லாமல்
வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும்
போனதுமே தெரியவில்லை என்றார்
என் செயலாளர்.
காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற
புத்தகம்,காமத்தை பற்றியதன்று.அது
,அதிபிரக்ஜை பற்றியது. அதை,ஒருவன்
கண்டு கொள்ள,ஏதாவது ஒரு வழி
இருக்க வேண்டும்.தன் எண்ணங்களை
கடந்து எல்லையற்ற மவுனத்திற்கு
செல்ல சிற்றினபம் இருக்கிறது.அது
ஒரு கண பொழுதுதான் என்றாலும்
அது நிரந்தரமானது.எல்லாமே அங்கே
நின்று போய்
விடுகிறது.நீங்கள் எல்லா
கவலைகளையும்,எல்லா
இறுக்கங்களையும் அப்போது மறந்து
போய் விடுகிறீர்கள், என்பதை சுட்டி
காட்டுகிறது அந்த புத்தகம்.
காமத்திலிருந்து அதிபிரக்ஜைக்கு
செல்வது சாத்தியம் என்பதை நான்
சொல்லி கொண்டு வருகிறேன்.உங்கள
ுக்கு அதில் மகிழ்ச்சி. உங்கள் காதில்
விழுவது,காமத்திலிருந்து என்பது
மட்டுமே.அதிபிரக்ஜைக்கு என்பதை
நீங்கள் காதில் போட்டு கொள்வதில்லை.
காமம் வெறும் ஆரம்பம் மட்டுமே அது
முடிவானது அன்று.அதை ஒரு
ஆரம்பமாக ஏற்று கொள்வதில் எந்த
தவறும் இல்லை.அதையே பிடித்து
தொங்கி கொண்டிருந்தால்தான் தவறாக
முடியும்.
சுதந்திர உறவு பற்றி நான் எதுவுமே
உபதேசிக்கவில்லை. இந்தியாவின்
மடத்தனமான மஞ்சள் பத்திரிக்கைதனம்
தான், என் தத்துவம் முழுவதையும் அந்த
இரண்டு சொற்களில் அடக்கிவிட்டது. 650
புத்தகங்கள் வெளியிட்டு
விட்டேன்.ஒரு புத்தகம் மட்டுமே காமம்
பற்றியது.மற்ற 649 புத்தகங்களை பற்றி
யாரும் கவலை பட வில்லை.காமம் பற்றி
பேசிய
அந்த ஒரு புத்தகம்தான் அவர்களுக்கு
பிரச்சனை.அது கூட காமம் பற்றியது
அன்று.அதுவும்,காமத்தின் ஆற்றலை
ஆன்மிக ஆற்றலாக எவ்வாறு
மாற்றுவது என்பதை பற்றியது.
உண்மையில் அது காமத்திற்கு எதிரான
நூல்.
அவர்கள் செய்வதெல்லாம்,மக்களுக்கு
தவறான தகவலை கொடுப்பது, பிறகு
அந்த தவறான தகவலின் அடிப்படையில்
பழி தூற்றுவது.என்னை அவர்கள்
நியாயமான முறையில்
வெளிப்படுத்தவே இல்லை.
இல்லையென்
றால்,இந்தியா புத்தி கெட்டது என்று
நான் நினைத்திருக்கவே மாட்டேன்.
தந்திரா தத்துவத்தை வெளியிட்ட ஒரு
நாடு கஜுராஹோ, கொனார்க் போன்ற
கோயில்களை உருவாக்கிய நாடு
முட்டாள்தனமானதாக இருக்க
முடியாது. நான் சொல்வதை விளங்கி
கொள்ள முடியாததாக இருக்க
முடியாது. கஜுராஹோ எனது
சாட்சியம். தந்திரா இலக்கியங்கள்
எல்லாமே என் சாட்சியங்கள். தந்திரா
போன்றவை தாக்கு பிடித்து இருந்த
நாடு இது ஒன்றுதான். உலகத்தின் எந்த
நாட்டிலும் காமத்தின் ஆற்றலை
ஆன்மிக ஆற்றலாக மாற்றும் முயற்சி
நடைபெறவே இல்லை.நான் அதைதான்
செய்து வருகிறேன். ஆனால்,
பத்திரிக்கையாளர்களுக்கு
யதார்த்தத்தில் விருப்பம்
இல்லை.அவர்களுக்கு பரபரப்பில்தான்
ஈடுபாடு.
:- ஓஷோ
நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறே
ன். உண்மையில் எழுதியதல்ல. என்
பேச்சை தொகுத்து
எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு,
"காமத்திலிருந்து கடவுளுக்கு".
அதற்கு பிறகு என்னுடைய நூற்றுக்
கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு
விட்டன. ஆனால், மற்றவற்றை
படித்தார்களா என்பது சந்தேகம்தான்.
குறிப்பாக இந்தியாவில் எல்லாரும்
படித்ததுகாமத்திலிருந்து
கடவுளுக்கு என்ற
புத்தகைத்தான். அவர்கள் எல்லாரும்
அதை விமர்சனம்
செய்தார்கள்.எதிர்த்தார்கள்.இன்னும் அதை
பற்றி கட்டுரைகளும், மறுப்பு
நூல்களும் எழுதி கொண்டுதான்
இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை
மறுத்து கொண்டே வருகிறார்கள். மற்ற
புத்தகங்களை பார்க்கவும் இல்லை.
குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா?
நான் ஏதோ ஒரே புத்தகத்தைதான்
எழுதியது போல.
மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள்.
காமமே காயமாகி விட்டது. அதை
குணப்படுத்தியாக வேண்டும்.
உடலுறவில் ஏற்படும் பரவசம்,
தியானத்தின் ஒரு சிறு பகுதியின்
ஆரம்பத்தை, உங்களுக்கு அடையாளம்
காட்டிவிடும்.காரணம்,அப்போது மனம்
நின்று விடுகிறது.காலம் நின்று
விடுகிறது.அந்த சில வினாடிகளில்
காலமும் இருப்பதில்லை.மனமும்
இருப்பதில்லை.நீங்கள் பரிபூரண
மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து
விடுகிறீர்கள். அது,அந்த விஷயம் பற்றிய
என் அறிவியல் அணுகுமுறை.
காரணம்,மனமற்ற நிலைக்கும்,பரவச
நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான
வேறு வழி எதுவுமே இல்லை.மனம்
கடந்தும்,காலம் கடந்தும் செல்வதற்கு
வழி இருக்கிறது என்பதை புரிந்து
கொள்வதற்கு,உடலுறவு தவிர
வேறு வழியில்லை.தியானத்தின்
முதல் அடையாளத்தை நிச்சயமாக
அதுதான் காட்டுகிறது.நான்
மக்களுக்கு இந்த உண்மையை
சொல்வதால்தான் உலகமே என்னை
கண்டனம்
செய்கிறது.
காமத்திலிருந்து அதி பிரக்ஜைக்கு
செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம்
முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்
டேன். கண்டிக்கப்பட்டேன். ஏன்
கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த
விளக்கத்தையும் யாரும்
கொடுக்கவில்லை. என் புத்தகம்,
முப்பத்து நான்கு மொழிகளில் மொழி
பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு
பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லா
சன்னியாசிகளும் அதை படித்து
விட்டார்கள்.
இந்து,சமண,கிறித்துவ,புத்த
சன்னியாசிகள் என்று யாராக
இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்த
புத்தகத்திற்கு சிறந்த
வாடிக்கையாளர்கள். சில
மாதங்களுக்கு முன்பு, இங்கே
புனாவில் சமண மாநாடு ஒன்று
நடந்தது.என் செயலாளர் ஆச்சரியமான
விஷயம் ஒன்று சொன்னார்.சமண
சன்னியாசிகள் இங்கே வந்து அந்த
புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள்.காம
த்திலிருந்து கடவுளுக்கு.அதை
வாங்கி தமது ஆடைக்குள் மறைந்து
வைத்து கொண்டு சத்தமில்லாமல்
வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும்
போனதுமே தெரியவில்லை என்றார்
என் செயலாளர்.
காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற
புத்தகம்,காமத்தை பற்றியதன்று.அது
,அதிபிரக்ஜை பற்றியது. அதை,ஒருவன்
கண்டு கொள்ள,ஏதாவது ஒரு வழி
இருக்க வேண்டும்.தன் எண்ணங்களை
கடந்து எல்லையற்ற மவுனத்திற்கு
செல்ல சிற்றினபம் இருக்கிறது.அது
ஒரு கண பொழுதுதான் என்றாலும்
அது நிரந்தரமானது.எல்லாமே அங்கே
நின்று போய்
விடுகிறது.நீங்கள் எல்லா
கவலைகளையும்,எல்லா
இறுக்கங்களையும் அப்போது மறந்து
போய் விடுகிறீர்கள், என்பதை சுட்டி
காட்டுகிறது அந்த புத்தகம்.
காமத்திலிருந்து அதிபிரக்ஜைக்கு
செல்வது சாத்தியம் என்பதை நான்
சொல்லி கொண்டு வருகிறேன்.உங்கள
ுக்கு அதில் மகிழ்ச்சி. உங்கள் காதில்
விழுவது,காமத்திலிருந்து என்பது
மட்டுமே.அதிபிரக்ஜைக்கு என்பதை
நீங்கள் காதில் போட்டு கொள்வதில்லை.
காமம் வெறும் ஆரம்பம் மட்டுமே அது
முடிவானது அன்று.அதை ஒரு
ஆரம்பமாக ஏற்று கொள்வதில் எந்த
தவறும் இல்லை.அதையே பிடித்து
தொங்கி கொண்டிருந்தால்தான் தவறாக
முடியும்.
சுதந்திர உறவு பற்றி நான் எதுவுமே
உபதேசிக்கவில்லை. இந்தியாவின்
மடத்தனமான மஞ்சள் பத்திரிக்கைதனம்
தான், என் தத்துவம் முழுவதையும் அந்த
இரண்டு சொற்களில் அடக்கிவிட்டது. 650
புத்தகங்கள் வெளியிட்டு
விட்டேன்.ஒரு புத்தகம் மட்டுமே காமம்
பற்றியது.மற்ற 649 புத்தகங்களை பற்றி
யாரும் கவலை பட வில்லை.காமம் பற்றி
பேசிய
அந்த ஒரு புத்தகம்தான் அவர்களுக்கு
பிரச்சனை.அது கூட காமம் பற்றியது
அன்று.அதுவும்,காமத்தின் ஆற்றலை
ஆன்மிக ஆற்றலாக எவ்வாறு
மாற்றுவது என்பதை பற்றியது.
உண்மையில் அது காமத்திற்கு எதிரான
நூல்.
அவர்கள் செய்வதெல்லாம்,மக்களுக்கு
தவறான தகவலை கொடுப்பது, பிறகு
அந்த தவறான தகவலின் அடிப்படையில்
பழி தூற்றுவது.என்னை அவர்கள்
நியாயமான முறையில்
வெளிப்படுத்தவே இல்லை.
இல்லையென்
றால்,இந்தியா புத்தி கெட்டது என்று
நான் நினைத்திருக்கவே மாட்டேன்.
தந்திரா தத்துவத்தை வெளியிட்ட ஒரு
நாடு கஜுராஹோ, கொனார்க் போன்ற
கோயில்களை உருவாக்கிய நாடு
முட்டாள்தனமானதாக இருக்க
முடியாது. நான் சொல்வதை விளங்கி
கொள்ள முடியாததாக இருக்க
முடியாது. கஜுராஹோ எனது
சாட்சியம். தந்திரா இலக்கியங்கள்
எல்லாமே என் சாட்சியங்கள். தந்திரா
போன்றவை தாக்கு பிடித்து இருந்த
நாடு இது ஒன்றுதான். உலகத்தின் எந்த
நாட்டிலும் காமத்தின் ஆற்றலை
ஆன்மிக ஆற்றலாக மாற்றும் முயற்சி
நடைபெறவே இல்லை.நான் அதைதான்
செய்து வருகிறேன். ஆனால்,
பத்திரிக்கையாளர்களுக்கு
யதார்த்தத்தில் விருப்பம்
இல்லை.அவர்களுக்கு பரபரப்பில்தான்
ஈடுபாடு.
:- ஓஷோ