""அனந்த சிவ போதம்"" (சித்த ரகசியம்)

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

""அனந்த சிவ போதம்"" (சித்த ரகசியம்)

Post by marmayogi » Tue Jun 23, 2015 10:05 am

அனந்த சிவ போதம்
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

Anandha_sivabotham. pdf book 1:

Here is the direct link:

http://www.mediafire.com/view/4relxv71d6yxsx3/

Anandha_sivabotham. pdf book 2:

http://www.mediafire.com/view/ruy7ccmu0bi71r7/

இந்த இரண்டு புத்தகங்களை டவுண்லோடு செய்து படித்து பாருங்கள் ஆன்மீக ரகசியங்கள் எல்லாம் வெட்டவெளிச்சமாக உள்ளது. இந்த இரண்டை படித்தாலே மற்றது எதுவும் தேவையில்லை. இவை கிடைத்தால் நீங்கள் வேறெங்கும் போகமாட்டீர்கள்.

இதை தாராளமாக பகிரலாம். ஆனால் அன்புநோக்கில் மட்டுமே தேடலுள்ளவர்களுக்கு பகிரலாம்.அந்த புத்தகத்திலே ஏதேனும் சந்தேகமெனில் எப்பொழுது வேண்டுமாயினும் போன் செய்யுங்கள்.அதற்கு முன்பாக புரிந்தாலும் புரியவில்லையாயினும் முதலில் ஒருமுறை படித்துவிடுங்கள்.

அதை எழுதியவர் நம் வழிகாட்டிதான்.ஆனால் அதிலே அவரின் புகைப்படமோ பெயரோ கூட வெளிவராத அளவில் உட்படையானவர்.அதேபோன்றே தாங்களும் தங்களை வெளிப்படுத்தாது உட்படையாக இருந்தால் விளக்குகிறேன்.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

பிறப்பெடுக்க ஒரு யோனி
பிறப்பறுக்க ஒரு யோனி
அபானன் வெளியேற ஒரு குதம்
பிராணன் உட்புக ஒரு குதம்
மலம் வெளியேற ஒரு குதம்
சளி வெளியேற ஒரு குதம்
மாயையில் நாம் அகப்பட ஒரு கன்னித்திரை
நம்மில் மாயை அகப்பட ஒரு திரை
கீழ்த்திரை கிழிந்தால் மாயை
மேல்திரை விலக்கினால் சாயை
தந்திர வாமத்தில் மூலாதாரம் கண்டுகொள்ளப்படாது ஆனால் சுவாதிஷ்டானமே முக்கியமாக கருதப்படுகிறது.அதேபோல் குண்டலினி யோகத்தில் சகஸ்ராரம் கண்டுகொள்ளப்படாது ஆனால் ஆக்கினை முக்கியமாய் கருதப்படும்.
தந்திராவில் மூலாதாரத்தில் 1008இதழ் கூறப்படுகிறது. யோகத்தில் சகஸ்ராரம் 1008 இதழாக கூறப்படுகிறது.
கீழ்த்திரை விலக்கினால் தான் விந்து கருப்பையை அடைந்து கரு உருவாகி குழந்தையை காணமுடியும்.அதேபோல் மேல்திரை விலக்கினால்தான் நாதம் விந்தையடைந்து கருக்குழந்தையை காணமுடியும்.


★மனிதப்பெண் யோனி உட்பட நால்வகையோனிகள் பிறப்பெடுக்க
வாய்க்குள் உள்ள உண்ணாக்கு அருகிலுள்ள துவாரம் ஐந்தாம் யோனி எனப்படுபவை பிறப்பறுக்க, மலமும் அபானனெனப்படும் மலக்காற்று வெளிப்படும் மலத்துவாரத்தையும் குதமென்பர்.பிராணன் உட்புகும் மூக்குநுனி உட்வாசலையும் குதமென்பர்.அவ்வழியே சளிவெளியேறும்.

★பெண்ணின் யோனித்துவாரத்திலிருந்து 2.5செ.மீ தூரத்திலுள்ள கன்னித்திரை எனும் ஜவ்வைப்போலவே மேலும் ஒருத்திரை இருப்பதாக கூறப்படுகிறது.அதுவும் கபமே.கீழே எவ்வாறு கன்னித்திரை கிழிவதைப் போலவே மேலுள்ள கபப்படலச்சவ்வை திறந்தே ஆகவேண்டியது.

★மேல்திரை கிழிந்தால் அதாவது பூட்டு திறந்தால்தான் நாதவிந்து கலப்பு.கீழ்த்திரை கிழிந்தால் விந்துநாதக் கலப்பு.பெண்ணோ ஆணோ பருவமடைய பன்னிரண்டு வருடம்.அதன் பிறகே குழந்தை மாத விலக்கும் ,உறவு கொண்டால் மாதவிலக்கு ரத்தம் நின்று அந்த விந்துநாதக்கலப்போடு அந்த ரத்தம் சுத்தமாகி அதுவுமிணைந்து கரு உண்டாகிறது.அதே போன்று ஒரு ஞானவானும் பருவபக்குவமடைய பனிரெண்டு வருடங்கள் ஆகும்.அதன்பின்னே கபநீரிறங்கும்.பின் நாதங்கேட்டலின் (உறவு) மூலம் அக்கபமே சுத்தமாகி அமிர்தமாகிறது.

★விந்தான ஒளிவுடன் கலப்பதன் மூலம் ஒளியான குமரியான சுப்பிரமணி கண்ணிற்கு குழந்தையாவன்.இவன் எதைக்கண்டாலும் எங்கு கண்டாலும் நம் பார்வைக்கும் பார்க்கும் பொருளுக்கும் குறுக்கே இருப்பதனாலேயே நந்தி என்றும் அழைக்கப்படுகிறான்.மற்ற மேலுள்ள வரிகள் புரியும்.இதுதான் என்பதல்ல இது என்னோட புரிதல் மட்டுமே!

★ வாமாச்சாரத்தில் மூலாதாரமே 1008 இதழ் எனவும் யோகத்தில் சகஸ்ராரமே 1008 இதழெனவும் கூறப்படுகிறது.யோகத்தில் சகஸ்ராரத்தை தொட்டாலும் ஆக்கினையே முக்கியமாய் கொள்ளப்படுகிறது.அதேபோல் தந்திர வாமத்தில் மூலாதாரம் கண்டுகொள்ளப்படவில்லை சுவாதிஷ்டானமே கண்டுகொள்ளப்படுகிறது.நம் உடலில் மிகச்சிறிய அனு விந்தனுவாகவும் பெரியஅனு கருமுட்டையாகவும் உள்ளது.மேலும் வாமத்திலும் சுரோணிதமெனும் நாதத்தை குறிமூலமாய் வாங்கி நாதவிந்து கலப்பே நடைபெறுகிறது.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

வேண்டும் என்பாள் சித்தி
வேண்டாம் என்பாள் புத்தி
எவனொருவன் வேண்டும் என்பதில் இடதுகாலையும்
வேண்டாம் என்பதில்
வலதுகாலையும்
வைத்து தொடர்ந்து இரண்டிலும் சாயாமல் நடுநிலையோடு செல்கின்றானோ அவனே வினா? அகன்!
வேண்டும்,வேண்டாம் என்ற சித்திபுத்தியே வினா? அகத்தின் இருமனைவிகள்!
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”