கண்ணுக்கு தெரியாத அணுத்துகளே பரமணு

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

கண்ணுக்கு தெரியாத அணுத்துகளே பரமணு

Post by marmayogi » Sat Jun 06, 2015 12:42 pm

அணுவின் அணுவினை ஆதிப்பிரானை
அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு
அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே"
-திருமூலர்-

★அணுவின் ஆற்றலே ஒவ்வொரு சீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் சீவாத்மா என்றனர். ஆன்மா என்பது அளப்பரிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது. அதன் சக்தியை, ஆற்றலை உணர்ந்தவர்களால் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

★அந்த ஆற்றலை உணர்ந்தவர்களே சித்தர்கள். நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல்மிகு ஆன்மாவின் சக்தியை உணர்ந்து, பிறவிப்பிணியைப் போக்கி, அட்டமா சித்திகளையும் பெற்று, மரணமிலாப் பேரின்ப வாழ்வைப் பெறுதலே ஆத்மஞானமாகும். இதுவே, சித்தர்கள் வகுத்த சாகாக்கல்வியும் ஆகும்.
கண்ணுக்குத் தெரியாத அணு எவ்வளவு சக்தி வாய்ந்ததென்பது நமக்குத் தெரியும். அந்த அணுவினை ஆயிரங் கூறிட்டால்தான் பரமாணு என்கிற ஆதிபிரானைக் காணலாம் என்கிறார்கள் சித்தர்கள் .
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”