உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

Post by marmayogi » Mon Jun 01, 2015 11:32 am



★வாழ்க்கைக்கு அடிப்படையானது உடல் , உயிர்,மனம், ஆன்ம சக்தி. ஒரு cell phone க்கு என்ன தேவை!!. இந்த நான்கும் தான் தேவை. முதலில் instrument இது தான் உடல். battery என்பது உயிர். simcard என்பது மனம். இறைசக்தி என்பது இறையருள். இது வானில் இருந்து வர வேண்டும். ஒரு cell phone க்கு சக்தி வானிலிருந்து வர வேண்டும்.

★இறையருள் வந்தால் கேட்டது கிடைக்கிறது. அது வரவில்லை எனில் கிடைக்காது. இதில் மூன்றில் எது இயங்கவில்லை என்றாலும் cell இயங்காது. instrument என்ற உடலை repair ஆக வைத்துகொண்டு signal நல்லா இருக்கு, charge ம் சரியா இருக்கு , எல்லாம் சரியாக இருக்கு ஆனால் உடல் அவுட்டு. எப்படி முடியும்!!.

★உடல் நலத்தை பொருத்து தான் மன நலமும் இருக்கும். ஒருவனுக்கு இதயத்தில் பிரச்சினை வைத்து கொண்டு மாடி படி ஏறு என்று சொன்னால் முடியாது. . ஊக்கம் போய்விடும். உடலில் ஒவ்வொரு உறுப்பும் பலவீனம் ஆகும் போது மனதிலும் பலவீனம் ஒவ்வொன்றாக ஆகும்.

★உடலில் பலவீனத்தை வைத்து கொண்டு தெம்பா இரு என்று சொல்வதானால் எந்த பயனும் இல்லை. உடல் சரியாக இருக்க வேண்டும். சரியாக இருந்தால் உயிர் ஓட்டம் இயங்கும்.உடம்பையும் வளர்க்க வேண்டும். அப்போது தான் உயிரும் வளரும். உடம்பு வளர வளர உயிர் தேய்வதனால் கண் ,காதுக்கு power dim ஆகிவிடும்.

★ஒரே ஒரு காரணம் உடம்பில் voltage பற்றவில்லை. உடம்பிலும் சுத்தம் இல்லை. ஐந்து அறிவு உயிர்கள் நோய் இல்லாமல் சந்தோஷமாக போகிறது. ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதன் கடிச்சிகிட்டு போரான், ரொடிச்சிகிட்டு போரான். ஆறு அறிவு அசிங்கமாக வாழ்வதற்காகவா வந்துசி???. எங்க போச்சி relaxation???. புரிஞ்சிகனும்.

★உடல் இவ்வளவு உயரம் என்றால் அவ்வளவு உயரம் இருக்க வேண்டும். இளமை , அழகு , ஆரோக்கிய உணர்ச்சி இந்த மூன்றும் இருந்தால் தான் உடலில் ஆரோக்கியம் வரும். ஒரு மனிதன் 120 வருடம் வாழ வேண்டும். ஒன்பது கோள்களும் சுற்றி வருகிறது என்றால் 120 வருடம் ஆகும். எத்தனை பேருக்கு சுக்கிர திசை வருது ???. 60 வயதிலேயே ஒருவனுக்கு மரணம் வருகிறது.

★உணவு முறையில் ஒழுங்கு இல்லை . கழிவு வெளியேற்றத்தில் ஒழுங்கு இல்லை. எல்லா செயல் முறைகளிலும் பல தவறான நெறி முறைகள். உண்மையை கண்டு கொள்ளாமல் self realization, சுய உணர்ச்சி , விழிப்புணர்ச்சி இல்லாமல் பின்பற்றும் ஓரே காரணம் தான் உடம்பு கெட்டு போகுது. முதலில் தேவை உடல் என்ற hardware. மூளை என்பது office. இதயத்தின் தலைமையான எல்லா உறுப்பும் நன்றாக இயங்க வேண்டும்.

★current ஒழுங்காக இருக்க வேண்டும். வெரும் உணர்ச்சி இருந்தால் மட்டும் போதாது.

அதற்கு சில நடைமுறை tips உள்ளது.
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
1) எண்ணை கொப்பளிப்பு

2) பல் பொடி கொண்டு பல் துலக்குதல்

3) தண்ணீர் குடித்தல்

4) மலக்கழிவை இனிமா கொண்டு வெளியேற்றுவதல்.

★காலையில் எழுந்து வாயை நன்றாக கழுவிவிட்டு சமையல் எண்ணை, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணைய், சூரிய காந்தி எண்ணெய் இதில் எதாவது ஒன்று 2 டியுஷ்பூண் வாயில் ஊற்றிடனும். 20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். correct ஆ 20 நிமிடம் கொப்பளிக்க வேண்டும். உடம்பிள் எல்லா இடத்தில் இருக்கும் அழுக்கு எல்லாம் வாய் பகுதிக்கு வந்துவிடும்.

★cancer கிருமி , எயிட்ஸ் கிருமி இருந்தாலும் கூட வந்துவிடும். எல்லா கிருமியும் வாய் பகுதிக்கு வந்த பிறகு பத்து நிமிடத்தில் வாயில் இருக்கும் எண்ணெய் பிசுபிசு என்று மாறிவிடும். பதினைந்து நிமிடத்தில் எச்சில் ஊறி கொளகொளனு மாறிவிடும்.20 நிமிடத்தில் மஞ்சள் வெள்ளை நிறமாக நுறைத்து கொண்டு இருக்கும். அதை துப்பிட்டு வாயை கழுவி விட்டு பல் துலக்க வேண்டும். இதனால் கழுத்து கீழேயும் நோய் வராது. தலை பகுதியிலும் நோய் வராது. மலக்குடல் சுத்தம் இல்லாமல் இருந்தால் கழுத்துக்கு கீழே நோய் வரும். சளி எனபது வெள்ளை மலம். மேலே சளி நெற்றியில் சேரவே கூடாது.

★ சளி அடைத்து தான் ஒரு மனிதன் இழுத்துகொண்டு உடலில் இருந்து உயிர் பிரிந்து விடுகிறது. சாக போகும் சமையத்தில் மூச்சு காற்று சரியாக இயங்காமல் மூச்சு காற்றை வேகமாக இழுத்து இழுத்து விடுவார்கள். அதை நாம் கவனித்து இருப்போம். மூச்சு பாதையில் சளி அடைத்து கொண்டால் மனிதனின் வாழ்நாள் குறைந்து 60 வயதிலேயே இறந்து விடுகிறான். இதற்கு முதலில் பின்பற்றுவது எண்ணெய் கொப்பளிப்பு.

★உடல் பருமன் இருந்தால் கூட குறைந்து விடும்.எந்த ஒரு நோய் கிருமி உடம்பிள் இருந்தால் கூட வெளியேறிவிடும். தேகம் சுத்தமாகும். உடல் சுத்தமாக 7 டிப்ஷ் இருக்கிறது.அதில் முதல் குறிப்பு எண்ணெய் கொப்பளிப்பு.

★சளி பிடிக்கவே பிடிக்காது. எந்த கிளிக்காவது சலதோசம் பிடித்ததை பார்த்தீர்களா ????. எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கு!!!. மரத்தில் அறை கிலோமீட்டர் அந்த புறம் இருந்தாலும் கீச்சி கீச்சி னு கத்துது. ஆறு அடி மனிதன் உலகிலேயே உயர்ந்தவன் என்று சொல்கிறோம். ஒரு மனிதன் பேசுவது 10 அடிக்கு கேட்க மாட்டுகுது. மனிதனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு நோக்காடு வருது!!!!.

★பலவீனம் இல்லை. தெம்பு இல்லை. ஒரு Dentist கிட்ட போயி எந்த பாம்புக்காவது பல்வலிக்குது கொஞ்சம் சிமெண்ட் வச்சி அடைங்க!!. முதலில் உங்கல கொத்தி தான் test பன்னனும் என்று சொல்லுதா!!!. சும்மா நெழு நெழுனு போகுது. நல்ல பாம்பு பேரு. இந்த உயிர்கள் எல்லாம் fresh இருக்கே!!!இயற்கையோடு இணங்கி வாழ்கிறது. ஆனால் மனிதன் மாத்திரை , ஊசி போட்டு கொண்டு இருக்கிறோம். இது அநாகரீகம். உடம்பை சரியாக கவனிக்கவில்லை எனில் நோய், வலி , மரணம் வருகிறது.


★அடி வயிற்றில் மல குற்றம் இருக்கவே கூடாது. காலை மாலை இரு வேலையும் மலம் வெளியேற வேண்டும். மலம் இயற்கையாக போகவில்லை எனில் அதற்கென்று சில சித்த மருத்துவர்கள் குவளை ஒன்று கண்டுபிடித்து உள்ளனர். . அந்த இனிமா குவலையை பாத்ரூமில் உயரத்தில் மாட்டி கொள்ள வேண்டும். சுத்தமான தண்ணீரை இனிமா கப்பில் ஊற்றிவிட்டு குமிஞ்சிகிட்டோம்னா 20 second ல் அந்த தண்ணீர் அடி வயிற்றுக்கு போயிடும். நேற்றைய idem ஆ இருந்தாலும் இன்றைய idem ஆ இருந்தாலும் எல்லாம் கொழகொழ னு கொழன்டு போயிடும். அந்த வயிற்றில் இருப்பதை push பன்னிடா மலம் சுத்தமாக வெளியேறிவிடும். அப்படி சுத்தமாக மல குடலை வைத்து கொள்ள வேண்டும்.

★ சமாதி ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தண்ணீரையும், உணவையும் அருந்த மாட்டார்கள். தேகத்தை சுத்த தேகமாக வைத்து கொண்டு தான் ஜீவ சமாதி ஆவார்கள். தேக சுத்தம் என்பது அவ்வளவு முக்கியம். ஆகவே மல குடலில் அசுத்தம் இருக்கும் வரை மலகுடலில் தான் மனச்சிக்கல்.

★ஒரு சிலர் என் பையன் சரியா படிக்க மாட்டுகிறான் சோம்பேறியா இருக்கான் , எழுப்பும் தோழுமா இருக்கிறான் என்று சொல்வார்கள். குடலில் கொக்கி புழு இருந்தால் சில அறிகுறிகள் இருக்கும். நாம் இயற்கையான உணவு உண்பது இல்லை.

★ஆடு மாடு இந்த விலங்குகளுக்கு மல சிக்கல் வருவதில்லையே!!!. ஏன் என்றால் இயற்கையான உணவை உண்கிறது. நாம அப்படி இல்ல!!! மாவு ,நெய் ,பால் ,அரிசி ,தாளித்து நிறைய processing செய்கிறோம்.அப்படியே சிக்கு புடிச்சி. ஒரு டம்ளரீல் தண்ணீர் ஊற்றிவிட்டு கழுவிவிடலாம். ஆனால் டம்ளரீல் எண்ணெய்யை ஊற்றி விட்டு கழுவினால் போகவே போகாது. சோப்பு போட்டா தான் போகும்.

★பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கிவிடலாம். ஆனால் நாம் எண்ணெய்,நெய் ஊற்றி சாப்பிடுரோமே!!. அதை எந்த சோப்பு போட்டு கழுவுவது???. அதனால் தான் சிக்கு புடிச்சி போகுது. மலம் ஒழுங்க வருவதில்லை. மூன்றில் ஒரு பங்கு வெளியேற்றிவிட்டு மீதியை தொப்பையாக வைச்சிருக்கோம்.

★நில கழிவு , நீர் கழிவு தேங்கி இருக்கும். நாலு நாளைக்கு அந்த இனிமா கப்பை பயன்படுத்தி பாருங்க!!. கழிவு வெளியே வருதானு பார்ப்போம்!!. எங்க தொப்பை வருதுனு பார்ப்போம்!!. தொப்பை போயிடும். தொப்பை வரவே வராது. எந்த குதிரைக்காவது தொப்பை இருக்கா???. அளவுக்கு அதிகமா சாப்பிடுதா சொல்லுங்க!!!.,அறிவில்லாத மனிதன் தான் தொப்பை வைத்திருக்கும்.

★ மனிதனுக்கு அறிவு இல்லைன தொப்பை வச்சிருப்பான். அறிவுள்ளவருக்கு தொப்பை வேண்டியதில்லை. மல கழிவை எந்த முறையை பயன்படுத்தியும் வெளியேற்றலாம்.


★இனிமா எங்கையும் கிடைக்கவில்லை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். ஒரு address தருகிறேன். தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம்.

மருத்துவர் இரா.சுப்பிரமணியன்,
காந்திஜி இயற்கை மருத்துவ நிலையம்,
IOB காலனி,மருதமலை,
கோயம்புத்தூர் 641046.
தொலைபேசி; 0422- 422339

★இது தவிர சர்வோதய சங்கங்களிலும்,இயற்கை மருத்துவ நிலையங்களிலும் இந்த கருவி எளிதாக கிடைக்கும்.

★அல்லது +919486519591 இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு கேட்டால் கூட கொரியர் மூலமாக வாங்கி கொள்ளலாம். இந்த தொலைபேசி எண் பதினாறு கவணகர் திருக்குறள் ராமகனக சுப்புரத்தினம் ஐயா அவர்களின் customer care ஆகும். தினமும் காலையில் மெக டீவி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை அனைவரும் பாருங்கள். 7:30 am மணிக்கு ஒளிபரப்பு ஆகும். மனிதனே மாபெரும் ஆற்றல் வாய்ந்தவன் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

★மனிதன் மரணம் அடைய தேவையில்லை. மரணத்தை வென்று மகா சமாதி ஆகலாம். அதற்காக பணத்தை கட்டி யோக மையத்தை தொடர்பு கொண்டு தான் கற்க வேண்டும் என்று தேவையில்லை. மெகா டீவி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியை பார்த்தாலே அத்தனை ரகசியமும் புரியும். மனிதன் எதற்காக வாழ்கிறான் என்ற தத்துவமும் புரியும்.

★எவர் ஒருவர் யோகம் சொல்லி தருகிறேன் என்று காசு கொடு என்று கேட்டால் அவர் போலியாக தான் இருக்க வேண்டும். அப்படி எல்லாம் நம்பி ஏமாது விடாதீர்கள். ஒரு உண்மையான குரு பணத்திற்கு ஆசைபட மாட்டார். எந்த ஒரு பற்றும் இல்லாமல் இருப்பார். பெரிய பெரிய ஆசிரமம் அமைத்து மக்களின் சொத்துக்களை அபகரிக்க மாட்டார்.

★உண்மையை உணர்ந்தவர்கள் வெளியில் காட்டி கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாத மாதிரி அப்பாவியாக இருப்பார்கள். தவம் செய்து ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்தால் அதெ வெளியில் யாருக்கும் சொல்ல கூடாது .
அப்படி சொன்னால் நமக்கு இன்னும் பெரிய சித்துக்கள் கிடைப்பது தடை படும் . யாரிடமும் சொல்லாமல் அற்புதங்களை ரசித்து கொண்டு இருக்க வேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.
நாம் தியானம் செய்வதை கூட யாருக்குமே சொல்லாமல் இருப்பது நல்லது இல்லையேல் நமது ஆன்மிக முயற்சி தடை பட்டு ஏதாவது ஒரு சிக்கலில் மாயை சக்தி மாட்டி விட்டுடும்.

★அப்புரம் மீள்வது கடினமாகிவிடும் .
அப்படி famous ஆன யாரும் ஜீவ சமாதி ஆகவில்லை.
எடுத்துக்காட்டு: புத்தர், osho, விவேகானந்தர் , ரமனமகரிஷி , இவர்கள் நோய் வந்து இறந்தார்கள். இவர்கள் famous ஆனவர்கள் . famous ஆன ஞனிகளின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்து பாருங்கள் கடைசியில் அவர்கள் மரணம் நோய் வந்ததாக தான் இருக்கும்.
ஆனால் famous ஆகாதா 108 சித்தர்கள் ஜீவ சமாதி ஆகி இருக்கிறார்கள்.
நோய் வந்து இறந்தாலும் அவர்கள் உடல் அழியுமே தவிர ஆன்மா இறைநிலைக்கு சென்றுவிடும். அவர்களும் ஞானிகளே.

★மரணமில்லா பெருவாழ்வை இலவசமாக சொல்லி தருகிறேன் என்று சொன்னால் யாரும் வருவதில்லை. காசு கொடுத்து வாங்கும் பொருளுக்கு தான் மதிப்பு கொடுக்கிறார்கள்.

★சாவு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பெரிய கோடீஸ்வரனாக இருந்தால் என்ன ஒரு ஏழையாக இருந்தால் என்ன!!!. எல்லோருக்கும் மரணம் என்பது வந்தே தீரும். அவர் பில்கேட் ஆ இருந்தா என்ன கிருலுகேட் ஆ இருந்தா என்ன!!!. மரணம் நிகழும் போது கண்ணு மேலே குத்திக்கும், நாக்கு இழுத்துக்கும், உடம்பு விறண்சி போயிடும். கடைசியில் பட்டாசு ,மேலம் தாளம் முழங்க இறந்த உடலை எரித்தோ அல்லது புதைத்து விடுவார்கள். இறந்த பிறகு சேமித்து வைத்த பொண் பொருள், உற்றார் உறவினர் யாரும் கூட வர மாட்டார்கள்.

★தினமும் makeup செய்து உடலை அலங்கரித்து அலகு பார்க்கிறோம். பூமியில் உடலை புதைத்து பிறகு ஆயிரம் புழுக்கள் உடம்பை அரித்து சாப்பிடும். இப்படி அலங்காரம் செய்த உடம்பை புழு தின்பதற்காகவா நாம் பிறந்தோம்!!!!!. நன்றாக யோசியுங்கள். ஞானம் பிறக்கும். நான் யார் என்ற தத்துவம் புரியும்.

★மனிதனாக பிறந்துவிட்டால் சாக தேவை இல்லை. உடம்பை ஒளி தேகமாக மாற்றி எங்கேயும் தோன்றலாம் எங்கேயும் மறையலாம். அந்த நிலைக்கு நமது உடல் மாற ஒரே ஒரு வழி தவம்,தியானம்,யோகம் மட்டுமே!!.


நன்றி. வாழ்க வளமுடன்
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

Post by marmayogi » Sat Mar 05, 2016 3:38 pm

காயம் என்பது உடல். கற்பம் என்பது பிரமனின் ஒரு பகற்பொழுது ஆகும். பிரமனின் ஒரு பகற்பொழுது கிட்டத்தட்ட 432 கோடி ஆண்டுகள் ஆகும். ஆக நம் உடலானது 432 கோடி ஆண்டுகளாக சிதையாது அழியாது எந்நிலையிலிருந்
தாலும் எம்மாறுதலடைந்தாலும் அப்படியே இருக்க வைக்க எடுக்கும் முயற்சியும் முயற்சியே பயிற்சியும் ஆகும்.
muuralikp
Posts: 33
Joined: Thu Jan 21, 2016 11:06 am
Cash on hand: Locked

Re: உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

Post by muuralikp » Sat Mar 05, 2016 5:30 pm

sir,
really good article and truth , i am expecting more articles
muuralikp
User avatar
arulraj12497
Posts: 447
Joined: Thu Aug 13, 2015 6:47 pm
Cash on hand: Locked

Re: உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

Post by arulraj12497 » Sat Mar 05, 2016 5:49 pm

thank u bro
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

Post by marmayogi » Sat Mar 05, 2016 6:45 pm

நன்றி
mayasiva
Posts: 62
Joined: Thu Nov 05, 2015 8:11 pm
Cash on hand: Locked
Bank: Locked

Re: உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

Post by mayasiva » Sun Mar 06, 2016 7:26 pm

Super bro very use full details
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: உடம்பை வளர்த்தால் உயிர் தானாக வளரும்-

Post by marmayogi » Sun Mar 06, 2016 9:03 pm

mayasiva wrote:Super bro very use full details

Thank you. Thank you
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”