இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா(சித்தர்கள் முறை)
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா(சித்தர்கள் முறை)
◆◆◆இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா◆◆◆
★★★★★★★★★★★★★★★★
★மனிதன் நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு நோய் காரணமாக அமைகிறது. மனிதனுக்கு வரும் முக்கால் பங்கு நோய்களில் மல கழிவுகளை சரியாக வெளியேற்றாமல் அடக்கி வைப்பதே காரணம் இந்த நவீன காலத்தில் மனிதன் விதவிதமாக சமைத்து உண்கிறான். அதுவும் எண்ணை பொருளால் சமைத்த உணவுகளை அதிகம் உண்கிறான்
★இதனால் ஜீரண மண்டலத்தில் அரைக்கப்பட்ட உணவானது அடிவயிற்றில் கழிவாக தேங்கிவிடும்.உதாரணமாக ஒரு எண்ணெய் பாத்திரத்தை உள்ள எண்ணெய் பசையை தேய்த்தாலும் போகவே போகாது. சோப்பு போட்டால் தான் போகும். அது போல மனிதனுக்கும் எண்ணெய் பொருளால் சமைத்த உணவை நாம் உண்ணும் போது அடிவயிற்றில் மல கழிவானது தேங்கி இருக்கும். மல கழிவை வெளியேற்றுவது கடினமாக இருக்கலாம்.
★அந்த காலத்தில் சித்தர்கள் தவம் செய்வதற்கு முன்பாக மல கழிவை வெளியேற்ற ஒரு யுக்தியை பயன்படுத்துபவர்கள். ஒரு ஆறு இருக்கும் பகுதியில் இடுப்பு அளவு நீரில் நின்று கொண்டு மூச்சு பயிற்சி( நவுலி,ஒட்டியானா பயிற்சி) மூலமாக ஆற்று நீரானது ஆசனவாய் மூலமாக அடிவயிற்று பகுதிக்கு இழுப்பார்கள். நவுலி, ஒட்டியானா பயிற்சி செய்யும் போது அடிவயிற்றில் இருக்கும் நீரானது மல கழிவுடன் கலந்து இருக்கும்.அதை மூச்சு காற்றை வேகமாக வெளியே விடுவார்கள்.
★ அப்போது அடிவயிற்றில் நீரும் , மலமும் ஆற்றில் கலந்து சென்றுவிடும்.சித்தர்கள் இந்த முறையை பயன்படுத்தினார்கள். இப்போது நவீன காலம் என்பதனால் சித்தர்கள் பின்பற்றிய வழிமுறையை கடைபிடிப்பது கடினம். அதற்காக உருவாக்கப்பட்டது தான் இனிமா கேன் என்னும் கருவி. இதை பயன்படுத்தி தினமும் காலை , மாலை என இருவேலையும் கழிவுகளை நீக்கிவிட்டால் மனிதனுக்கு நோய் என்ன பிணியில் இருந்து விடுபடலாம். குடலில் ஏற்படும் அனைத்து நோயிலிருந்தும் முழுமையாக விடுபடலாம்.
★இதை யோகம் செய்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது சித்தர்கள் கண்டுபிடித்த easy technology.
இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர். சித்தர்கள் கண்டுபிடித்து பயன் இல்லாமல் போகுமா என்ன!!!!!!
★இந்த குறிப்பு பதினாறு கவனகர் ஐயா மூலமாக தான் எனக்கு தெரிய வந்தது. நான் 5 வருடமாக இந்த கருவியை பயன்படுத்துகிறேன். கடந்த 5 வருடமாக எனக்கு நோய் வந்ததே இல்லை. நான் தினமும் காலையில் mega tv வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி 7; 30 am மணிக்கு பார்ப்பேன். அற்புதமான நிகழ்ச்சி. இந்த நிகழ்சி நான் பார்க்கவில்லை என்றால் நானும் சாதாரண மனிதனாகவே வாழ்ந்திருப்பேன்.
""உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"".
திருமந்திரம்-4:
◆◆◆இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா◆◆◆
★★★★★★★★★★★★★★★★
இனிமா எடுக்கும் முறை:
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
★தலை உயரத்தில் (அதிகபட்ச உயரத்தில் ) எனிமா கேனை மாட்டி கொள்ளவும்.
★நாசிலின் மீது எண்ணெய் தடவவும். சுத்தமான குடிநீரைத் தேவையான அளவு கேனில் ஊற்றவும் .
★குனிந்து நின்று கொண்டு ஆசன வாயில் நாசிலை செருகவும். உள்ளே சுமார் 2 அங்குலம் ஆழம் இருக்கும்படியாக இழுத்து வைக்கவும்.
★அப்போது நீர் உள்ளே செல்லும். செல்லாவிட்டால் நாசிலை வெவ்வேறு கோணங்களில் சாய்த்து பிடித்தால் நீர் உட் செல்லும். மூன்று நிமிடங்களில் நீர் சென்றுவிடும் .
★தேவையான நீர் உட் சென்றவுடன் நாசிலை எடுத்து விடலாம். நீரை உடனே கழித்து விட கூடாது. இதனால் பயன் குறைவு.
★சில நிமிடங்கள் நீரை உள்ளே வைத்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். முடியாவிட்டால் கழித்து விடலாம்.
★எனிமா எடுத்து கொண்டவுடன் குத்துக்கால் வைத்து படுத்துக் கொண்டால் தான் நீரை வைத்திருக்க எளிதாய் இருக்கும்.
★நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தால் சிரமம். தேவையான நேரம் வைத்திருந்து விட்டு நீரை கழித்து விடலாம்.
★மோட்டார் சைக்கிள் , கார் போன்ற வாகனங்களில் புகையை வெளியேற்றும் குழாய் ( exhaust pipe ) அடைத்து கொண்டால் எஞ்சின் இயக்கம் நின்றுவிடும்.
★அதேபோல் கழிவை வெளியேற்றும் மலக்குடலில் இருக்கும் ஜென்மாந்திர அடைப்பே நம்முடைய பல நோய்களுக்கு காரணம்.
இந்த இனிமா கேன் அனைத்து சித்த மருத்துவ நிலையங்களிலும் கிடைக்கும்.
★நெற்றியில் வெள்ளை மலமும்( சளி ) அடிவயிற்றில் மஞ்சள் மலமும் சேரகூடாது என்று வள்ளலார் கூறியுள்ளார். மனிதனுக்கு பல நோய்கள் வருவதற்கு காரணம் கழிவுகளை வெளியேற்றாமல் தேக்கி வைப்பதே காரணம்.
★இனிமா கேன் யை பயன்படுத்தினால் மனிதனுக்கு நோய் வரவே வராது.
அடி வயிற்றில் உள்ள கழிவை வெளியேற்றி விட்டால் குண்டலினி சக்தி முதுகு தண்டு வழியாக எளிமையாக புருவமத்திக்கு செல்லும். முதுகுதண்டில் தடையோ தேக்கமோ இருக்காது.
★எந்த பாம்பிற்காவது எனக்கு பல் வலி என்று சொல்லி கொண்டு டாக்டர் கிட்ட போயிருக்கா!!. அல்லது எந்த கிளி யாவது எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்கு கீச்சி கிச்சி னு கத்த முடியல னு சொல்லி இருக்குமா !!!. மனிதனுக்கு மட்டும் எதுக்கு இவ்வளவு நோய்கள் வருகிறது ??. அதுவும் ஆறு அறிவு என்று நம்மை நாமே சொல்லி கொள்கிறோம்.
★பசி, பிணி , முப்பு , மரணம் இதை வெல்வதே யோகம். மனிதனாக பிறந்துவிட்டால் மரணம் அடைய தேவையில்லை. மரணத்தை வெல்ல பயிற்சி முறை உள்ளது. இதை நான் அடிகடி சொல்லி இருக்கிறேன்.
★ மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நோயை குணப்படுத்த லச்சம் லச்சமாக மருத்துவ மனையில் செலவு செய்கிறார்கள். நோய் வந்த மருத்துவமனை செல்வதை விட நோயே வராமல் இருக்க வழிமுறையை பின்பற்றினால் பிணி என்ற நோயிலிருந்து விடுபடலாம் .
★ சளி மனிதனுக்கு வராமல் இருக்க ஒரு tips உள்ளது. எனக்கு சளி பிடித்ததே இல்லை. ஐந்து வருடமாக நான் மருத்துவமனை சென்றது இல்லை. எந்த மருந்தும் எடுத்து கொள்வதில்லை. ஒரு மனிதனுக்கு எய்ட்ஸ் கிருமி இருந்தாலும் அதை உடம்பில் இருந்து வெளியேற்றி விடலாம். சளி வராமல் இருக்க ஒரு வழிமுறை உள்ளது . அதை அடுத்து வரும் பதிவில் சொல்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்.
Last edited by marmayogi on Fri Nov 13, 2015 10:03 am, edited 2 times in total.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா(சித்தர்கள் முறை)
அருமையான பதிவு.
ஆன்லைன் ஜாப் போல ஆன்மீக ஆரோக்ய விழிப்புணர்வும் நம் மக்களிடையே குறைவாக உள்ளது.
உங்கள் பதிவுகள் வெறும் ஆன்மீகத்தினை மட்டுமல்லாமல் ஆரோக்கியம் சார்ந்த அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.
வரவேற்கிறோம்.
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா(சித்தர்கள் முறை)
நன்றி சார். ஆன்மீகத்தின் முதல் வெற்றி நோயில்லாமல் வாழ்வது. உடம்பு சரியாக இயங்கவில்லை எனில் உயிர் ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். உடம்பை சரியாக வைத்துகொண்டல் உயிர் நன்றாக இயங்கும். உயிர் ஓட்டம் நன்றாக இருந்தால் உடலில் வலியோ, நோயோ ஏற்படாது. இரத்த ஓட்டம் , காற்றோட்டம் , வெப்ப ஓட்டம் இம்மூன்றில் ஒன்று தடைபட்டாலும் , திசை மாறினாலும் , வெளியேறினாலும் , அளவில் குறைந்தாலும் , ஓட்டத்தில் குழப்பம் அடைந்தது ,அந்த இடத்தில் அணு அடுக்கு சீர் குழைவு ஏற்படும்.
அந்த வலி இடத்தால் விரிந்து காலத்தால் நீடித்தால் அதுவே நோய். நோயை விரட்டி விட்டால் அடுத்ததாக முதுமை அடையாமல் இளமையாக இருக்கலாம். ageing process stop செய்யவும் பயிற்சி முறை உள்ளது. 50 வயது மனிதரை 30 வயது வாலிபராக மாறலாம். அதற்கு மிகவும் முக்கியம் சுத்த தேகம். மனித உடம்பு சுத்த தேகமாக மாறிவிட்டால் விஷத்தை அருந்தினாலும் மரணம் வராது. அப்படி தேகத்தை தங்கம் போல மாற்ற வேண்டும். அப்போது தான் தியானத்தின் மூலம் கிடைக்கும் அதிகபடியான சக்தியை இந்த உடம்பு தாங்கும். தியானத்தில் கிடைக்கும் சக்தியை விரயம் செய்யாமல் உடம்பிற்குள் சேமித்து பழகிவிட்டால் ஒருவர் நோயை குணப்படுத்தலாம். அந்த அளவிற்கு மனித உடம்பில் ஆற்றல் உள்ளது.
அந்த வலி இடத்தால் விரிந்து காலத்தால் நீடித்தால் அதுவே நோய். நோயை விரட்டி விட்டால் அடுத்ததாக முதுமை அடையாமல் இளமையாக இருக்கலாம். ageing process stop செய்யவும் பயிற்சி முறை உள்ளது. 50 வயது மனிதரை 30 வயது வாலிபராக மாறலாம். அதற்கு மிகவும் முக்கியம் சுத்த தேகம். மனித உடம்பு சுத்த தேகமாக மாறிவிட்டால் விஷத்தை அருந்தினாலும் மரணம் வராது. அப்படி தேகத்தை தங்கம் போல மாற்ற வேண்டும். அப்போது தான் தியானத்தின் மூலம் கிடைக்கும் அதிகபடியான சக்தியை இந்த உடம்பு தாங்கும். தியானத்தில் கிடைக்கும் சக்தியை விரயம் செய்யாமல் உடம்பிற்குள் சேமித்து பழகிவிட்டால் ஒருவர் நோயை குணப்படுத்தலாம். அந்த அளவிற்கு மனித உடம்பில் ஆற்றல் உள்ளது.
- கிருஷ்ணன்
- Posts: 1273
- Joined: Tue Feb 26, 2013 3:32 pm
- Cash on hand: Locked
Re: இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா(சித்தர்கள் முறை)
Yesssssss......
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
Re: இன்னலை போக்கி இன்பம் கொடுக்கும் இனிமா(சித்தர்கள் முறை)
அனைவரும் பயன்படுத்துங்கள் . எளிமையான முறை