"இறை ஆற்றல் எல்லாமாக இருக்கிறது.

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

"இறை ஆற்றல் எல்லாமாக இருக்கிறது.

Post by marmayogi » Mon Mar 16, 2015 7:06 pm

"இறை ஆற்றல் எல்லாமாக இருக்கிறது. எனவே எனக்கும் இறையாற்றளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது. அதே மகாசக்தியாகிய 'இறையாற்றல்' சங்கிலிப்பிணைப்பாக நானுமாகவும் இருக்கிறது. அந்த சங்கிலிப்பிணைப்பாகிய அதன் ஒரு முனை தான் 'நான்'. இன்னொரு முனை தான் அந்த தெய்வீகப் பேராற்றல் என்று என்னும் போது, அந்தச் சங்கிலியைப் போட்டு விட்டு அவரை எங்கே போய்த் தேடினால் கிடைப்பார்?
.

"கடவுள் + (ஆணவம், கன்மம், மாயை ) = "மனிதன்".
"மனிதன் - (ஆணவம், கன்மம், மாயை ) = "கடவுள்".
.
"God + Impurities = Man;
Man - Impurities = God".
.

இதுவரையில் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன் தனது மூலம் என்ன என்று தன்னையே திரும்பிப் பார்க்கிற நிலையே அறிவின் உயர்ந்த நிலை. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்ந்த நிலை "ஆறாவது அறிவு".
.

பார்ப்பவன் யார் எனப் பார்ப்பவன் தான் பார்ப்பனன் - யோகி.
அதற்கும் மேலாக பிரம்மத்தை அறியும் போது பிராமணன் எனப்படுகிறான்.
.

எல்லாம் இறைநிலைதான். நானும் இறைநிலைதான்... என்று சொல்லிக் கொண்டு அதை வாழ்க்கையில் பயன் படுத்தாவிட்டால் அதை வறட்டு வேதாந்தம் என்று கூறுவார்கள்.
.

எல்லாப் பொருட்களிடத்தும் எல்லா உயிர்களிடத்தும் இறை நிலையைக் காண வேண்டும். அப்படி காணக்கூடிய அளவு அறிவிலே உயர்வு பெற வேண்டும்.
.

அன்பு வேறு இறைநிலை வேறு அல்ல. "உண்மையிலேயே மெய்ப்பொருளை உணரும் போதுதான் கருணை பிறக்கும்".
.

தன்னை உணர்வதற்குத் 'தவம்' (Simplified Kundalini Yoga) வேண்டும். உயிர்களுக்குக் கடமை செய்ய 'அறம்' வேண்டும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”