வாழ்த்தும் பயனும் -- வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

வாழ்த்தும் பயனும் -- வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

Post by marmayogi » Sat Mar 14, 2015 12:35 pm

வாழ்த்தும் பயனும் ----- வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

”வாழ்க வளமுடன்” எனற எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது. அம்பு இருக்கிறது. அடுதது அம்பு எய்வதற்கு ஒரளவு நாணை பின்னுக்கு இழுத்து விடுவது ஒன்று, கடைசி வரைக்கும் நாணை இழுத்து அம்பு விடுவது என்பது வேறு. எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதை கொண்டு வருகிறோமோ அங்கே இருந்து கொடுக்க கூடிய வாழ்த்துக்கோ, அல்லது சாபத்திற்கோ கூட வேகம் அதிகம், செய்லபடும் வேகமும் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த வேகத்தில் நாம் சொல்ல கூடிய சொல்லுக்கு, எண்ணக்கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம்; சீக்கிரமாக செயலுக்கும் வந்து விடும். நமக்காக என்னென்ன வேண்டுமோ அதை செயல் படுத்துவதற்கு சில நாட்களானாலும் சரி, பிறகுக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதிக பயன் விளைவிக்கும்.
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”