தியானமும் பயமும்
- marmayogi
- Posts: 1814
- Joined: Sun Jul 06, 2014 9:40 pm
- Cash on hand: Locked
தியானமும் பயமும்
ஆழ்ந்த தியானத்தில் மரணத்துக்குப் பழகிப் போகும்போது பயம் மறைந்து போய்விடுகிறது. ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, "நான் இந்த உடல் அல்ல. நான் இந்த மனம் அல்ல. பிறகு எனக்கேது மரணம்?" என்பது தெரிந்துவிடுகிறது. இந்த உடல் மண்ணோடு மண்ணாகிப் போகும். ஆனால் பிரக்ஞை என்றும் இருக்கும். அப்போது பயம் மறைந்து போய்விடுகிறது. பயம் மறைந்து விடும்போது பிறருடைய பயத்தை நீக்க வேண்டும் என்ற மகத்தான ஆசை வந்துவிடுகிறது. பயத்தில் வாழ்கிறவர்கள் துயரத்தில் வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பயம் சூழ்ந்த பயங்கரமாக இருக்கிறது.