பிராணாயாமம்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

பிராணாயாமம்

Post by marmayogi » Sun Feb 22, 2015 4:25 pm

பிராணாயாமம் என்பது பொது பெயர். இவ் உலகில் காற்று என்னும்
சக்தி மாய சக்தியாக உள்ளது. அணுவினும் சிறியதாக உள்ள இறைவன் அதில் இருக்கிறான். தாயின் கருவறையில் ஒரு நிலையிலும், பிறந்தவுடன் வேறு நிலையிலும் உள்ளான். எனவே
நாம் பிறந்தவுடன் காற்றை சுவாசிக்க வில்லை,காற்றின் மூலம் நம்
உடலில் சென்று அவன் இயங்கிக் கொண்டு இருக்கிறான். பிராணன்
என்னும் நாமம் கொண்டு தங்கி உள்ளான்.சரீரத்தில் (10) பத்து
விதமான வாயுக்கலாகப் பிரிந்து உடலையும் இயக்கி வருகிறான். பிராணன் சரீரத்தை விட்டு எப்போது கிளம்புகிறதோ அப்போது
மற்ற (9) ஒன்பது வாயுக்களும் கூடவே சென்றுவிடும். நமது சுவாசம்
நிமிடத்திற்கு 15 (பதினைந்து ) மூச்சுக்கள் நடக்கும், ஒரு மணிக்கு 60 பது நிமிடங்கள், மணிக்கு 900 (60`x 15) மூச்சிக்கள் நடக்கும், நாள் ஒன்றுக்கு 21,600 (24 x 900) மூச்சிக்கள் நடக்கும். பிராணாயாமப் பயிற்சியின் மூலம் ,உடலின் உள்ளே , வெளியே சென்று கொண்டு
இருக்கும் காற்றின் அளவை முறைப் படுத்துதல் ஆகும் (கன்ட்ரோல்)
முதலில் நாடி சுத்தி எனப்படும் பிராணாயாமத்தின் மூலம் நம்
உடம்பில் ஓடும் இரத்தத்தை சுத்தப் படுத்துவதன் மூலம் ( கெட்ட)
வேண்டாத எண்ணங்கள் வர விடாமல் தடுத்து விடலாம். இதுபோல்
பல நிலைகள் உள்ளன.. இதைச் செய்ய மக்களிடம் சொன்ன விதம்
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும் என்றனர் ..
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”