சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
User avatar
marmayogi
Posts: 1814
Joined: Sun Jul 06, 2014 9:40 pm
Cash on hand: Locked

Re: சிவவாக்கியர் - சித்தர் பாடல்கள்

Post by marmayogi » Thu Jan 22, 2015 9:53 pm

Image

★அருளிருந்த
வெளியிலே அருக்கன்நின்ற
இருளிலே
பொருளிருந்த
சுழியிலே புரண்டெழுந்த
வழியிலே
தெருளிருந்த
கலையிலே தியங்கிநின்ற
வலையிலே
குருவிருந்த
வழியினின்று ஹு வும்
ஹீயுமானதே.


★ஆனதோர் எழுத்திலே அமைந்துநின்ற
ஆதியே
கானமோடு தாலமீதில்
கண்டறிவது இல்லையே
தானந்தானும்
ஆனதே சமைந்தமாலை காலையில்
வேனலோடு மாறுபோல்
விரிந்ததே சிவாயமே.


★ஆறுகொண்ட வாரியும்
அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும்
துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்குமுட்
கமலமும்
மாறுகொண்ட
ஹூவிலே மடிந்ததே சிவாயமே.


★வாயில் கண்ட கோணமில்
வயங்குமைவர் வைகியே
சாயல் கண்டு சார்ந்த
துந்தலைமன்னா யுறைந்ததும்
காயவண்டு கண்டதும்
கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும்
பறந்ததே சிவாயமே.


★பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூரின்
வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையின்
மேவியே
பிறந்ததே இறந்தபோதில் நீடிடாமற்
கீயிலே
சிறந்துநின்ற
மோனமே தெளிந்ததே சிவாயமே.


★வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல
அனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து
நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி
மூலவீணா தண்டினால்
முளரியால
யங்கடந்து மூலநாடி ஊடுபோய்.


★அடிதுவக்கி முடியளவும்
ஆறுமா நிலங்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள்
சோதியை
உடுபதிக்கண்
அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல
யோகியே.


★மந்திங் கள்உண்டுநீர் மயங்குகின்ற
மானிடர்
மந்திரங் கள்ஆவது மரத்திலூற
ல்அன்றுகாண்
மந்திரங் கள்ஆவது மதித்தெழுந்த
வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணமேதும்
இல்லையே.


★மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற
மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர்
மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ள்உம்முளே மதித்தநீரும்
உம்முளே
மந்திரங் கள்ஆவது மனத்தின்ஐந்
தெழுத்துமே.


★உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி
நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர்
வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும்
ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச
லைத்திறந்து காணவேண்டும்
மாந்தரே.


★ஓரெழுத்து லிங்கமாய் ஓதுமட்ச
ரத்துளே
ஓரெழுத்து யங்குகின்ற
உண்மையை அறிகிலீர்
மூவெழுத்து மூவராய்
முளைத்து எழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே
சிவாயமே.


★முத்தி சித்தி தொந்தமாய்
முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த அப்புனல்கள்
ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காளகண்டர் அன்பினால்
அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து
கொண்மினே.


★மூன்றிரண்டும் ஐந்துமாய்
முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய்
முயன்றதே உலகெலாம்
ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற
நாதமாய்
தோன்றுமோர்
எழுத்தினோடு சொல்ல
ஒன்ம்இமில்லையே.


★வெளியுருக்கி அஞ்செழுத்து
விந்துநாத சத்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி
ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும்
இருவரை அறிந்தபின்
வெளிகடந்த தன்மையால்
தெளிந்ததே சிவாயமே.


★முப்புரத்தில் அப்புறம் முக்கணன்
விளைவிலே
சிற்பரத்துள் உற்பனம் சிவாயம்அஞ்
செழுத்துமாம்
தற்பரம் உதித்துநின்ற தாணுவெங்கும்
ஆனபின்
இப்பறம் ஒடுங்குமோடி எங்கும்
லிங்கமானதே.


★ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற
சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற
கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்ட
வெளியும் ஆனதே.


★உருத்தரித்த போது சீவன்ஒக்கநின்ற
உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும்
சிவாயமம் அஞ்செழுத்துமாம்
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம்
ஆனபின்
கருத்தினின்று உதித்ததே
கபாலமேந்து நாதனே.


★கருத்தரித்து உதித்தபோது கமலபீடம்
ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள்
ஆனதுங்
கருத்தரித்து உதித்தபோது
காரணமிரண்டு கண்களாய்
கருத்தினின் றுதித்ததே கபாலம்
ஏந்துநாதனே.


★ஆனவன்னி மூன்று கோணம்
ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்
டுஅலர்ந்தது
ஆனசோதி உண்மையும் அனாதியான
உண்மையும்
ஆனதான தானதா அவலமாய்
மறைந்திடும்.


★ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க
வெளியிலே
நான்றபாம்பின் வாயினால்
நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய்
முப்புரங் கடந்தபின்
ஈன்றெழுந்த
அவ்வினோசை எங்குமாகி நின்றதே
எங்குமெங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகம்
ஒன்றலோ
அங்குமிங்கும்
ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்குதா பரங்களும்
தரித்துவாரது ஒன்றலோ
உங்கள்எங்கள் பங்கினில்
உதித்ததே சிவாயமே.

☆சிவவாக்கியர்
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”