நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க

பக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.
Post Reply
ரவிபாரதி
Posts: 65
Joined: Mon May 05, 2014 10:17 pm
Cash on hand: Locked

நல்லதையும் அன்பாகச் சொல்லுங்க

Post by ரவிபாரதி » Wed Jun 25, 2014 8:48 pm

* மனதிலுள்ள ஆசைகளைக் குறைப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பம் குறைந்து ஆனந்தம் பெருகும். வெளியிலுள்ள பொருட்களிலிருந்து நமக்கு ஆனந்தம்
வருவதில்லை, நம்மிடையே இருந்து தான் ஆனந்தம் பிறக்கிறது.
* உடல் மற்றும் மனரீதியாக செய்யும் பாவத்தை போக்க புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* துக்கத்துக்கு விதை போட்டுக் கொண்டிருக்காமல் பாவத்தை போக்க தினமும் ஈஸ்வர தியானத்தில்
ஈடுபடுவது நல்லது.
* உலகத்தில் எவரும் பாவியாக இருக்க விரும்பவது இல்லை, ஆனால், பாவகாரியம் அதிகம் செய்கிறோம். அனைவரும் புண்ணியம் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் புண்ணியச் செயல்களைச் செய்வதில்லை.
* ஒருவனுக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது, அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாகச் சொன்னால் அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
* ஒருவனிடம் எத்தனை தோஷம் இருந்தாலும் அதனை பெரிதுப்படுத்தக்கூடாது. சிறிய அளவில் குண விசேஷம் இருந்தால் அதையே பெரிதாக கொண்டாட வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர் :great:
Post Reply

Return to “ஆன்மிகப் படுகை”