பரோட்டா[Parotta]

உங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post Reply
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

பரோட்டா[Parotta]

Post by mubee » Mon Oct 14, 2013 2:06 pm

தேவையான பொருட்கள்:

*மைதா - 4 கப் [குவித்து]
*பேகிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*பொடி உப்பு - 1 1/2 டீஸ்பூன்
*எண்ணைய் - 1/2 கப்

செய்முறை:

1. மைதாவோடு, பேக்கிங் பௌடர், உப்பு, சோடா இவற்றைச் சேர்த்து இருமுறை சலிக்கவும்.
2. மாவோடு, 2 முதல் 3 டீஸ்பூன் எண்ணைய், சர்க்கரை, இவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
3. போதுமான தண்ணீர் விட்டு, மிருதுவான, தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
4. ஒரு எண்ணைய் தடவிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும்.
5. பிசைத்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுமாவின் மேல் பக்கம் எண்ணைய் விட்டு 5 லிருந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.
6. கல்லின் மேல் மாவை, இன்னொரு முறை அடித்து பிசையவும்.
7. ஆரஞ்சு அளவுள்ள உருண்டைகளாகச் செய்யவும்.
8. எண்ணைய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை மெல்லிய வட்டமாகத் தட்டிப் பரப்பவும்.
9. மேலே சிறிது எண்ணைய் தடவி, சிறிது மைதா தூவி, கொசவம் போல்[pleats] மடித்து வந்து நடுவில் ஒன்றாக சேர்க்கவும்.
10. இரு முனைகளிலிருந்து சுருட்டினால் நடுவில் இரு உருண்டைகள் வரும்படி சுருட்டவும்.
11. ஒன்றின் மீது ஒன்று வத்து மெதுவாக தட்டையாக்கவும்.
12. எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து அதே எண்ணையில் முழக்கி வைக்கவும்.
13. சுடுவதற்கு முன், உருண்டையை லேசாகத் தட்டி கனமான பரோட்டாவாக கையினால் தட்டவும்.
14. சுமாரான அளவில்தோசைக்கல் வைத்து பரோட்டாவுக்கு இருபுறமும் எண்ணைய் விட்டுச் சுடவும்.
15. அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு துணியால் பக்கங்களை அழுத்தி, பின், தளர்த்தி சூடாகப் பரிமாறவும்.
User avatar
mubee
Posts: 531
Joined: Tue Jul 09, 2013 6:04 pm
Cash on hand: Locked

Re:பட்டூரா [Bhatura]

Post by mubee » Mon Oct 14, 2013 2:08 pm

தேவையான பொருட்கள்

*மைதா - 2 கப் [குவித்து]
*புளிக்காத கெட்டித் தயிர் - 1/2 கப்
*பால் - 1/4 கப்
*எண்ணைய் - 1 1/2 டீஸ்பூன்[மாவுக்கு]
*சமயல் சோடா - 3 சிட்டிகை
*உப்பு - 3/4 டீஸ்பூன்

செய்முறை

1. மாவு. உப்பு, சோடா. எண்ணைய் இவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு கலக்கவும்.
2. தயிர், பால் சேர்த்து நன்றாகப் பிசையவும். [தேவையானால் பிசையும் போது இன்னும் பால் சேர்த்துக் கொள்ளவும்]
3. மூன்று மணி நேரம் மூடி வைக்கவும்.
4. மைதா மாவில் புரட்டி வழக்கமான பூரியை விட சற்று கனமாக பெரிய சப்பாத்தி போல் இடவும்.
5. பெரிய வாணலியில் எண்ணைய் காயவைத்து ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொன்னிறமாகப் பொரிக்கவும்.
6. கொண்டைக் கடலை மசாலாவோடு சூடாகப் பரிமாறவும்.
Post Reply

Return to “நம் வீட்டுச் சமையலறை”