பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Tue Aug 07, 2012 1:14 am

அழகான முக அழகைப் பெற!!!!
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.

முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்
கோரை கிழங்கு பொடி - 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Tue Aug 07, 2012 1:16 am

குளியல் பொடி


இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

அருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
vkavi
Posts: 24
Joined: Sat Aug 04, 2012 3:26 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by vkavi » Wed Aug 08, 2012 6:45 pm

ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல இருக்கு

:aah: :aah: :aah: :aah:

இப்படிக்கு உங்கள்
வேதாளம்
vkavi
Posts: 24
Joined: Sat Aug 04, 2012 3:26 pm
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by vkavi » Wed Aug 08, 2012 6:54 pm

ஆனால் தினமும் குளிக்கணுமுங்க! அது ரம்ப முக்கியமுங்க.

:grain: :grain: :grain: :grain: :grain:

இப்படிக்கு உங்கள்
வேதாளம்
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Sun Aug 26, 2012 1:24 pm

மூட்டு வலிக்கு இதமான உணவு


"தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்"னு சொல்வாங்க. அதுகூட... மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். அது கொடுக்கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசானவங்களுக்கு வரக்கூடியது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒருவித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம்புல உள்ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியாகி வேலை செய்யறதோட விளைவு இது.

30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள்லகூட இந்த வலியை உணரலாம். முக்கியமா காலை நேரத்துல வலி அதிகமிருக்கும். இது சீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்பரையாகவும் தாக்கக்கூடியது.

எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பிடற உணவோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாருக்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க.

பரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களோட டயட்!

மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப்பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்ததாம். முதல் கட்டமா, அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு.

அப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.

சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி... இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்தற உணவுகளாம். மூட்டு வலியோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.

இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக்கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக்கு. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.

மூட்டுவலி வந்ததுமே என்னவோ ஏதோனு அலறத் தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாருங்க. நீங்க அடிக்கடி விரும்பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்திருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியாதப்ப, மருத்துவரைப் பார்க்கலாம்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Sun Aug 26, 2012 1:28 pm

குழந்தைகளின் கோடைக்கால சரும பாதுகாப்பிற்கு


கோடை காலத்தில் எப்போதும் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் பதநீர் நல்லது. அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். மேலும் உடலில் அடிக்கடி ஏற்படும் வியர்வையை முடிந்தளவு துடைத்து விடுங்கள். இல்லாவிட்டால் உப்பு, சர்க்கரை கலந்த தண்ணீரை கையோடு எடுத்து செல்வது மிகவும் நல்லது.

வெயில் காலத்தில் வெளியே செல்லும்போது அதிகமான மேக்கப்பை தவிர்த்து விடுங்கள். மேக்கப் சாதனங்களில் இருக்கும் ரசாயனங்களால் தோலில் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் அபாயம் உண்டு. மஞ்சள் பூசுவது கூட சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்! தரமான பவுடர்களை தேர்ந்தெடுத்து பூசுங்கள்.

கோடை காலத்தில் வெளியே செல்லும் போது முகம், கழுத்து, கைகள் என வெயில்படும் உறுப்புகளில் சன்ஸ்கிரீன் லோஷனை தடவிய பிறகு செல்லுங்கள். இவை வெயிலால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும். பெண்கள் முடிந்தவரை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுங்கள்.

வெயில் காலம் முழுவதும் மெல்லிய, பருத்தியில் ஆன உடைகளை அணிந்து கொள்ளுங்கள். வியர்த்தாலும் உங்கள் உடம்பில் வியர்வை தங்காது. ரொம்பவும் இறுக்கமான... ஆடைகள் வேண்டாம். குறிப்பாக ஜீன்ஸ், நைலான் உடைகளை தவிர்த்து விடுங்கள்.

கறுப்பு நிறமாக இருப்பவர்களின் தோல் பகுதி வெயிலில் அதிகமாக பாதிப்படையாது. ஆனால் அதிக வெளுப்பாக இருப்பவர்களின் தோலில் அலர்ஜி ஏற்படும். இவர்கள் அதிகம் வெளியில் சுற்றாமல்... வெயில் படாமல் பாதுகாப்பது நல்லது.

சூரிய ஒளியில் வேலை பார்ப்பவர்கள், கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. சூரிய ஒளியினால் அதிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள்தான் நமது உடம்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கோடை வெயிலில் உண்டாகும் பாதிப்பை "சன் ஸ்ட்ரோக்" என்று கூறுவர். அதிக வெயில் அடிக்கும் நகரங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

கோடை காலத்தில் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம். காரமான... மசாலா சேர்த்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பழைய சாதம், மோர், தயிர்சாதம், தயிர் பச்சடி, காய்கறிகள் சாலட், வெள்ளரிக்காய், தக்காளி, தர்பூசணி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெயில் காலத்தில் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், குடை பிடித்து செல்வது நல்லது. தலையில் தொப்பி அணிந்து கொள்வது சூட்டை கட்டுப்படுத்தும். கண்களில் கூலிங்கிளாஸ் கண்ணாடிகளை அணிந்து கொள்வது கண்களை பாதுகாக்கும்.

பொதுவாக குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. கோடை காலத்தில் வெயிலின் பாதிப்பால் குழந்தைகளுக்கு தோலில் பாதிப்பு ஏற்படும். இதன் தாக்கம் உடல் முழுவதையும் பாதிக்கும். கோடையில் வியர்க்குரு எல்லாருக்கும் வருவது சகஜம்தான் என்றாலும், குழந்தைகளுக்கு எப்போதுமே வியர்க்குரு வரும்!

இதற்கு முக்கிய காரணம்... குழந்தைகளுக்கு எண்ணை தேய்த்தபிறகு, பிளாஸ்டிக் ரப்பர் சீட்டுகளில் படுக்க வைப்பதுதான்! இது கூடாது... அதன் மீது ஒரு துணியை விரித்து அப்புறம் படுக்க வைக்கலாம். அதேபோல், குழந்தைகளுக்கு அடிக்கடி பவுடர் அடிப்பதும் நல்லது. இது வியர்க்குரு வருவதை தடுக்கும். அதேபோல், கோடையில் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை அடிக்கடி கொடுக்கலாம்.

சில குழந்தைகளுக்கு வறண்ட சருமம் இருக்கும். இதனால் கை, கால்களில் சொரசொரப்பு இருக்கும். சின்ன காயம் என்றாலும் சீக்கிரத்தில் ஆறாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்களுக்கு கிருமித்தொற்றும் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான குழந்தைகளை குளிப்பாட்டி முடித்தவுடன், அவர்கள் உடம்பின் மீது "மாய்ஸரைஸர்" என்ற கிரீமை தடவி விடுவது நல்லது. சில குழந்தையின் கன்னங்கள் சிவந்திருந்தால் அதை அழகு என்று அள்ளிக் கொஞ்சுவோம். ஆனால் அது அழகு அல்ல...! அலர்ஜி. கோடை காலத்தில் இந்த அலர்ஜி அதிகமாக ஏற்படும். சில குழந்தைகளுக்கு உணவு, சுகாதாரமற்ற சுற்றுப்புறம் என இருந்தால் அலர்ஜி வரலாம். எப்போதுமே குழந்தைகள் படுக்கும் படுக்கை சுத்தமாக இருப்பது அவசியம்.

அதேபோல், குழந்தைகள் கவிழ்ந்து படுக்கப் பழகும்போது, உராய்வு ஏற்படும். பிளாஸ்டிக் பொருட்களில் குழந்தையின் உடல் படும் போதும் உராய்வு ஏற்படும். இதனாலும் அலர்ஜி உருவாகலாம். எனவே குழந்தைகளுக்கு அலர்ஜி வந்தவுடன் அதற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பது அவசியம். வீடு, குழந்தையின் உடை, ரெடிமேட் நாப்கின் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மேலும் சொறி, திட்டு திட்டாக வீங்கினால் உடனே டாக்டரை அணுகுவது நல்லது.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Sun Sep 15, 2013 5:19 pm

அழகு டிப்ஸ்


அலைபாயும் கூந்தல், பளபளப்பான தேகம், மாசுமருவற்ற சருமம், முத்தான பற்கள், காந்தக் கண்கள், செழிப்பான கன்னம், பவழ இதழ்கள், சொக்க வைக்கும் வனப்பு.. இப்படித்தோற்றம் அளிக்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?

ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் (Ice Cream) போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.

இயற்கை தரும் க்ளென்சர்ஸ்

பால் நல்ல க்ளென்சர் என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்! குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.

தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத் தடவிக் கொள்ளலாம்.

வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம்.

பளிச் முகத்துக்கு

பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!

முகப் பொலிவுக்கு

வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகு கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்.

மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம் ஜாதிக்காய் வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்.. மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்!

கருவளையம் மறைய

கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

சருமம் கருமை மாற

முட்டைகோஸின் வெளிப்புற இலைகளை எடுத்து மிக்ஸியிலிட்டு சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

கழுத்தைப் பராமரிக்க

நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்.... ஒரு ஸ்பூன் வெங்காயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய டபுள் சின் நாளடைவில் சூப்பர் சின் ஆகி விடும்!

முகத்தில் புதுப்பொலிவுக்கு

தர்பூசணி (Watermelon) பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசி வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும்.

பப்பாளிப்பழமும் (Papaya) அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது!

சிவந்த இதழ்களுக்கு

சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்!

நகங்கள் பொலிவு பெற

பாதாம் எண்ணை (Almond Oil) சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும். பேரிச்சம்பழம் (Dates) கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Tue Sep 17, 2013 12:56 am

பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!


கருப்பு தலைமுடி வெள்ளையாகி கலங்க வைக்கிறதா?


அரை கிலோ நல்லெண்ணையை காய்ச்சி இறக்கியதும், அதில் 50 கிராம் பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணையை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சியக்காய் போட்டு அலசுங்கள்.

வாரம் இருமுறை இப்படி குளித்து வர, நரைமுடிகள் கருமைக்கு மாறிவிடும். இளநரைக்கு இன்னொரு சிகிச்சை... ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், 3 டீஸ்பூன் வெந்தய பவுடரை கலந்து தலைக்கு "பேக்" போட்டு, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சிக்கிரமே இளநரை நீக்கிவிடும்.

பிசுபிசுப்பை போக்க

கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ.. மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் போதும் "பிசுபிசுப்பு" போய்விடும்.

கறிவேப்பிலையில் ஒரு "ஆஹா பேஸ்ட்..."

மருதாணி - 1 பிடி, கறிவேப்பிலை - 1 பிடி, செம்பருத்தி இலை - 1 பிடி, கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை - 4... இவற்றை முந்தைய நாளே ஊற வையுங்கள். மறுநாள் அரைத்து, தலைக்குத் தேய்த்து அலசுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்தால் போதும். தலை சுத்தமாகி, கூந்தலில் வாசனைத் தூக்கும்.

"ஜெல் சிகிச்சை"

சோற்று கற்றாழை "ஜெல்"லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அந்த விழுதை "பேக்" போட்டு 15 நிமிடம் கழித்து தலையை அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த "பேக்" போட்டுப் பாருங்கள். தலை குளிர்ச்சியாவதுடன், முடி வளர்ச்சியும் தூண்டப்பட்டு "கருகரு"வென வளர ஆரம்பிக்கும்.

தலை அரிப்புக்கு

சுருள் பட்டை - 10 கிராம், பிஞ்சுக்கடுக்காய் - 10 கிராம், வெந்தயம் - 10 கிராம், கறிவேப்பிலை - 10 கிராம், செம்பருத்தி பூ - 10 கிராம், ரோஜா மொட்டு - 10 கிராம்... இவற்றை ஓரிரண்டாக அம்மியில் நசுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, அவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, பத்து நாட்கள் வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர சகல பிரச்னைகளும் தீர்ந்து, முடி ஆரோக்கியமாக இருக்கும்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Sun Oct 27, 2013 2:48 pm

அழகாகனுமா டென்ஷனை குறைக்கலாமே!!!

Image
Image
Image
சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் பழம் போல எப்போதும் ப்ரெஷ் ஆக இருப்பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த மூஞ்சுடன் இருப்பார்கள். இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும் மிஸ் ஆகி தான் இருப்பதோடு அவர்களின் அழகும் காணமல் போய்தான் இருக்கும். இவ்வாறு அழகை வைத்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர்.

அந்த ஆய்வு இயற்கை அழகு யாருக்கு கிடைக்கும் என்ற கோணத்தில் அமைந்து இருந்தது. 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் அவர்கள் தினமும் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாக இருப்பவர்களை காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் ப்ரெஷ் ஆகவும் அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி ஆய்வாளர்கள் கூறும்போது அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது.

இந்த மனதை இயற்கையாக அதாவது டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும். என்று தெரிவித்தனர். என்ன நீங்களும் டென்ஷன் பார்ட்டி என்றால் இப்பவே உங்களை டென்ஷனை தூக்கி எறிந்து விடுங்கள். இல்லையெனில் அழகு உங்களிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிடும்.
User avatar
Plaks1979
Posts: 99
Joined: Fri Mar 09, 2012 1:05 am
Cash on hand: Locked

Re: பெண்கள் ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!!!!!

Post by Plaks1979 » Sun Oct 27, 2013 3:13 pm

சருமத்தில் ரோமமா? நீக்கலாம்... தடுக்கலாம்!

Image
Image
நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப் பெரிய சவாலான இந்தப் பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழ குத் துறையில். அத்தனையும் பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே... சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.

‘‘பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல் போவதே முக்கிய காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை என வேறு காரணங்களும் இதன் பின்னணியில் உண்டு. இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந் தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்’’ என்கிற ராஜம், அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.

பியூமிஸ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஸ் ஸ்டோ னில் தடவி வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும். கடலை மாவு, பார்லி பவு டர், தேன் மூன்றும் தலா 1 டீஸ்பூன் அளவு எடுத்து, சில துளிகள் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து, ரோமம் நீக்க வேண் டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரைத் தெளித்து, சந்த னம் தடவி வைத்த பியூமிஸ் ஸ்டோனால், மிக மென்மையாக ரோமத்தின் எதிர் திசையில் தேய்க்கவும். பிறகு அந்த இடத்தைக் கழுவ வும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம் குறைந்து, வேர்க்கால்கள் பலவீனமடையும்.

விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து, சம அளவு எடுத்துக் கலந்து, நீர் விட்டு பேஸ்ட் போலச் செய்து, உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும். எரிச்சலாக உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ, தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.

பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன் வெல்லத் தண்ணீர் கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும், மென்மையாக உரித்தெடுத்து விடலாம். தொடர்ந்து இப்படிச் செய்தால், பெண் குழந்தைகள் பருவமடையும் போது, ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.

சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள் எல்லாம் சம அளவு கலந்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது, மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித் தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.

செய்யக்கூடாதவை...

சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாம லிருப்பது உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.

கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், ரோமங்களை நீக்கிய இடம், தடித்து, கருப்பதுடன், ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். கெமிக்கல் கலந்த ஹேர் ரிமூவிங் கிரீம்களை உபயோகிப்பதும் ரோம வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி நின்று விடும். அந்த இடங்களை அப்படியே வறண்டு போகவிடாமல், வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் வை த்து, ஊறிக் குளிப்பது மூலம் ஓரளவு நிவாரணம் காணலாம்.

பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத் தெரியாமல் தற்காலிகமாக மறைக்கப்படும். ஆனால், பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய, அதாவது, நான்கைந்து நாள்களில் மறுபடி ரோமங்கள் தம் பழைய நிறத்துக்குத் திரும்பும். கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”