குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
geetha1985
Posts: 31
Joined: Fri Sep 14, 2012 5:33 pm
Cash on hand: Locked

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

Post by geetha1985 » Mon Oct 01, 2012 1:08 pm

குழந்தைகளுக்கு மருந்து தரும் முன் இரண்டு விசயங்களை நாம் கவனிக்க வேண்டும் I .வயது II .எடை

எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.

அதே போல் வயதும் மிக முக்கிய காரணி ஆகும் .பல மருந்துகளின் அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .

குழந்தைகளை உட்கார வைத்தே மருந்து தருவது நல்லது .படுக்க வைத்து தரும் போது புரை ஏறுதல் என்று சொல்லப்படும் மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .

மருந்து கொடுக்கும் முன் அதை தருபவர் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும் .

அளவுகள் :

குழந்தைகளின் எடைக்கு ஏற்பவே மருந்துகளை தரவேண்டும் . மருத்துவர் சொன்ன அளவை சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .

ஒரு சி.சி என்பது - ஒரு மிலி

ஒரு டீ ஸ்பூன் என்பது -5 மிலி

அரை டீ ஸ்பூன் என்பது -2 .5 மிலி

ஒரு டேபிள் ஸ்பூன் என்பது -15 மிலி
(டீ யை விட டேபிள் தான் பெருசு )

dropper எனப்படும் சொட்டு மருந்து போடும் குழல் உபயோகிக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .

சொட்டுகுழலில் (dropper ) ஒரு மிலி என்பது 15 -20 சொட்டுகள் ஆகும் .

குழலின் முழு அளவு ஒரு மில்லி ஆகும் .

குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .

மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என கவனித்து மருந்து தரவேண்டும் .

மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில் குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .

அதாவது ௦.5 மிலி என்பது எண்ணிகையில் 10 சொட்டுக்கு சமம் .

ஒரு மில்லி என்பது எண்ணிகையில் 15 -20 சொட்டுக்கு சமம் .

(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20 சொட்டும் , சற்றே கூழ் போன்ற மருந்துகள் 15 சொட்டும் இருக்கும் )

பாட்டில் மூடியில் உள்ள அளவுகள் சில நேரம் மாறலாம் .எனவே நாம் மருந்துகளை அளக்க சுத்தமான புது சிரிஞ் கொண்டு அளந்தால் அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .

மருத்துகளை தோரயமாக அளக்காமல் சரியாக அளந்து தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே மருந்து தருகிறார் .எனவே அவர் எழுதிய அளவை சரியாக தரவும் .

குறைவாக கொடுத்தால் மருதின் வீரியம் சரியான அளவில் கிடைக்காது .

அதேபோல் எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ அத்தனை வேளை தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).

சுரத்திற்கு தரப்படும் பாரசிடமால் மருந்தை 4 -6 மணி நேரத்திற்கு ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010 ... ldren.html

ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5 நாள் வரை தரவேண்டும் ஜுரம் நின்றாலும் இதனை தொடர்ந்து தரவேண்டும் .

dry syrup எனப்படும் பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர் கலந்த பின்பே உபயோகிக்க வேண்டும் .


சிலர் அவ்வப்போது பொடியை எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கொடுக்கும் பழக்கத்தை செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு 4 -7 நாட்கள் மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி மருந்து பாட்டிலின் உரையில் குறிப்பிட பட்டிருக்கும் .

ஒரு முறை வாங்கிய மருந்தை மீண்டும் மீண்டும் மருத்துவரை கேட்காமல் தரக்கூடாது .

சில மருந்துகளை திறந்தபின் குறிப்பிட்ட நாள்கள் தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி தேதி முடியாவிட்டாலும் திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .

சில தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது .

உதாரணமாக நிமுசுலைட் என்ற மருந்தை
குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது என்று தடை செய்தும் அது மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது
http://doctorrajmohan.blogspot.com/2010 ... ulide.html

அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும் மருந்தை 12 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும் தவறாக பயன்படுத்த படுகிறது .
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”