அழகுடன் திகழுங்கள்.........
- mithrajani
- Posts: 94
- Joined: Tue Jan 08, 2013 9:47 pm
- Cash on hand: Locked
அழகுடன் திகழுங்கள்.........
தழும்புகளானது நிரந்தரம் அல்ல. வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிமையாக நீக்கிவிடலாம். தழும்பை போக்க சில இயற்கை வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றைப் பின்பற்றி தழும்புகளைப் போக்கி, அழகுடன் திகழுங்கள்.
பொதுவாக கற்றாழை ஜெல் அனைத்து வகையான சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும். அதிலும் தினமும் இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு, மற்ற பிரச்சனைகளும் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
தேன் உடலுக்கு மட்டும் நன்மையைக் கொடுப்பதுடன், சருமத்திற்கும் நன்மையை வழங்க வல்லது. அதற்கு அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை தான் காரணம். எனவே தினமும் தேன் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள்.
மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதனை சருமத்தில் தினமும் தடவி ஊற வந்தால், அது சருமத்தில் உள்ள தழும்புகளை போக்குவதுடன், மற்ற சரும பிரச்சனைகளையும் போக்கிவிடும்.
பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகளானது மறையும்.
அனைவருக்குமே எலுமிச்சை தழும்புகளை மறைக்க உதவும் பொருட்களில் ஒன்று என்பது தெரியும். ஆனால் அதனை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவினால், அவை இரண்டிலும் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால் அது தழும்புகளை மறைத்துவிடு
முல்தானிமட்டி என்பது சருமத்திற்கு அழகூட்டும் ஒரு ஒப்பனை பொருள். முல்தானிமட்டியில் மெக்னீஷியம் குளோரைடு அடங்கி உள்ளது. முல்தானிமட்டி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும்.
முல்தானிமட்டியானது, மாவு போல பிசையப்பட்டு நேரடியாக முகத்தில் தடவலாம். இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதனால் எவ்வித எதிர்விளைவுகளும் ஏற்படுவதில்லை.
முல்தானிமட்டி நிறமிகளை குறைத்து தோலை சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. அழற்சி மற்றும் சொறிகளால் ஏற்படக்கூடிய சிவப்பையும் குறைக்க உதவுகிறது முல்தானிமட்டி.