சருமம் மினுமினுன்னு ஜொலிக்கணுமா? கடுகு வெச்சு ஃபேஷியல் பண்ணு

ஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
Post Reply
cm nair
Posts: 1139
Joined: Tue May 21, 2013 12:59 pm
Cash on hand: Locked

சருமம் மினுமினுன்னு ஜொலிக்கணுமா? கடுகு வெச்சு ஃபேஷியல் பண்ணு

Post by cm nair » Sun Nov 17, 2013 10:27 pm

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருந்து, முக அழகை கெடுக்கிறதா? அதற்கு கவலைபட வேண்டாம். வீட்டில் சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். இந்த பொருள் மிகவும் ஈஸியாக அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கக்கூடியது. இத்தகைய பொருளை சருமத்தை வைத்து பல முறைகளில் பராமரிக்கலாம். இப்போது அந்த கடுகை எவ்வாயெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!



* ஒரு டேபிள் ஸ்பூன் கடுகை எடுத்துக் கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.



* கடுகை வைத்து ஃபேஷியல் செய்வதில், மிகவும் சிறந்தது என்றால், அது இந்த முறை தான். இந்த முறையால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.



* கடுகு மற்றும் கற்றாழையை கலந்து செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். இந்த ஸ்கரப் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இது ஒரு மிகவும் சிறப்பான இயற்கை ஸ்கரப். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.



* முகம் நன்கு மினுமினுப்போடு காணப்பட, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 2-3 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.



ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்து வந்தால், விரைவில் முகம் பொலிவாவதை தெரிந்து கொள்ளலாம்.
Post Reply

Return to “சக்தி இணை மருத்துவம்”