Page 20 of 23
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 7:50 am
by muthulakshmi123
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 1:24 pm
by ramkumark5
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 1:31 pm
by ramkumark5
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 1:38 pm
by ramkumark5
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 2:12 pm
by சாந்தி
New Year Image
pizap.com10.55619985004886981356854127046.jpg
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 5:11 pm
by muthulakshmi123
adithan post.jpg
Happy New Year--2013
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 7:18 pm
by சாந்தி
New Year Welcome Video
Happy Birthday to 2013
We are celebrating the Upcoming New Year 2013 through this Video Clip
[youtube]
https://www.youtube.com/watch?v=qIpNHDCX0tk[/youtube]
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 7:45 pm
by ramkumark5
புத்தாண்டு பரிசு
“ஏன் டா பிரபா இப்படியே சோகமா இருக்க?” என்றான் ரவி. “ஏன் டா சொல்ல மாட்ட! நான் என்ன உன்னை மாதிரி மாச சம்பளமா வாங்கிட்டு இருக்கேன். தொழில் ரொம்ப மோசமா போகுது டா” என்றான் பிரபா. “ஆரம்பிச்சுட்டியா உன் பொலம்பலை. சரி இங்க வா. உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். நம்ம நந்தபுரம் முருகன் கோவிலுக்கு ஒரு முனிவர் வந்திருக்கார். அவரை போயி பார்த்தைநா உன் கஷ்டங்களுக்கு ஒரு விடுவு கிடைக்கும் னு நினைக்கிறேன் “ என்றான் ரவி. பிரபாவும் வேகமாக தலையை ஆட்டினான்.
அன்று புத்தாண்டு நாள். பிரபா முனிவரை பார்ப்பதற்காக கோவிலுக்கு சென்றிருந்தான். கோவிலுக்குள் நுழைந்ததும் நேராக முனிவரை பார்க்க சென்றான். முனிவர் அவனிடம் “ முதலில் கடவுளை தரிசனம் செய்து விட்டு வா பா. அப்புறம் வந்து உன் குறையை சொல்லு” என்றார். பிரபா சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தான்.
வந்ததும் முனிவரை பார்த்து “ நான் என்னோட குறையை தான் சொல்ல வந்திருக்கேனு எப்படி கண்டு பிடிச்சிங்க சாமி” என்றான் பிரபா. “அதை விடு பா. உன் குறை என்ன’னு சொல்லு” என்றார். “என் பேரு பிரபா. நான் மூன்று வருடமா தொழில் செய்துட்டு இருக்கேன். ஆனா மூனு வருடமா எனக்கு தொழில்’ல நஷ்டம் தான் ஏற்பட்டுருக்கு. அதான் ஏதாச்சும் பரிகாரம் இருக்கானு கேட்கலாம்’னு வந்தேன்” என்றான்.
அவனின் கதையை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த முனிவர் “உன் கஷ்டங்களுக்கு எல்லாம் என்ன காரணம் னு நினைக்கிற” என்றார். “நான் என்ன சாமி நினைக்கிறது. கடவுள் எனக்கு இதை தான் எழுதி வச்சிருக்காரு போல” என்றான். இதைக் கேட்டதும் முனிவர் சிரித்துக் கொண்டே “ அப்ப உன் கஷ்டங்கள் எல்லாத்துக்கும் கடவுள் தான் காரணம் னு சொல்றீயா? கடவுள் இது வரைக்கும் உனக்கு எதுவும் செய்யலைனு நினைக்கிறியா” என்றார். “அட போங்க சாமி கடவுள் எனக்கு என்ன செஞ்சாரு” என்றான்.
“உனக்கு மூன்று வருஷமும் தொழில் ல தோல்வி'னு சொன்னியே. அந்த தோல்வில இருந்து கத்துகிறதுக்கு நிறைய பாடங்கள கொடுத்தது யாரு பா. வாழ்க்கை'ல வெற்றி பெறனும் னா தோல்வில இருந்து கத்துகிற அறிவு வேணும். அந்த அறிவை ஒவ்வொரு வருஷமும் புத்தாண்டு பரிசா உனக்கு கொடுத்திருக்காரு கடவுள். இவ்வளவு பரிசை வருஷா வருஷம் வாங்கிட்டு கடவுள் எனக்கு எதுவுமே கொடுக்கலைனு சொல்றியே பா” என்றார்.
“போ பா. போயி உன் தொழில தொடர்ந்து நடத்து. இந்த மூன்று வருஷ அனுபவம் உனக்கு எப்பவும் கை கொடுக்கும். நீ நல்ல நிலைமைக்கு வருவ” என்று சொல்லி அனுப்பினார். பிரபாவும் அவரை வணங்கி விட்டு மனதில் தெளிவுடன் கோவிலில் இருந்து கிளம்பினான். முனிவர் கூறியது போலவே பின்னாளில் பிரபா அந்த ஊரின் பெரிய தொழிலதிபராக உயர்ந்தான்.
பிரபாவுக்கு மட்டும் இல்லங்க நம்ம எல்லோருக்குமே இந்த கதை பொருந்தும். வெற்றிக்கான முதல் படி தோல்வி'னு சொல்வாங்க. ஆனால் உண்மையில் வெற்றிக்கான முதல் படி தோல்வி’ல இருந்து நாம கத்துகிற அனுபவம் தான்.. இதை நீங்க மனசுல வச்சுக்கிட்டீங்கன்னா எல்லோரும் வாழ்க்கை’ல வெற்றி பெறலாம். வரவிருக்கும் ஆண்டு இனிமையானதாய் அமைய எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 8:39 pm
by ramkumark5
Re: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி
Posted: Sun Dec 30, 2012 9:49 pm
by muthulakshmi123
31st post.JPG
Happy New Year--2013