லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்து மங்கள்யான் செயற்கைக்கோள் பூமியை சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் செயற்கை கோளுடன் விஎஸ்எல்விசி 25 ராக்கெட்டை விண்ணுக்கு இந்தியா அனுப்பி உள்ளது. முதற்கட்டமாக பூமியை சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று பாதையின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
71,000 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்த மங்கள்யானின் கருவியை இயக்கி அதன் தொலைவை நான்காவது கட்டமாக மேலும் உயர்த்தும் பணி இன்று அதிகாலை நடைபெற்றது. திட்டமிட்டபடி இயந்திரம் சரியாக வேலை செய்ததால் பூமியில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தகட்டமாக 1 லட்சத்து 92 கிலாமீட்டர் தொலைவில் செயற்கைகோளை நிலை நிறுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1.20 லட்சம் கி.மீ. தொலைவில் பூமியை சுற்றும் மஙகள்யான்
-
- Posts: 1139
- Joined: Tue May 21, 2013 12:59 pm
- Cash on hand: Locked